நல் இதயங்கள் உடைந்தால்
Feb 06, 2026,11:59 AM IST
- வே.ஜெயந்தி
நல் இதயங்கள் உடைந்தால்
நிசப்தம் கூட கண்ணீர் சிந்தும்;
புன்னகை மறைந்து போகும்,
பூக்கள் கூட வாசம் இழக்கும்.
ஆனால் அந்த உடைந்த துண்டுகளில்
இன்னும் ஒளி மறைந்து கிடக்கும்
அன்பு உண்மையானதென்பதற்கான
அமைதியான சான்றாக.
உடைந்த இதயம் ஒருநாள்
மீண்டும் மலரும்;
உடையலாம் ஆனால்
அன்பை விடமாட்டா.
(About the Author: V. JAYANTHI , Graduate teacher, Chengalpattu district)