V Sankar poem: நடிப்பதே வாழ்க்கை !

Su.tha Arivalagan
Apr 27, 2026,01:41 PM IST

- வெ.சங்கர்


மானுட வாழ்வின் 

மகத்தானக் கலை 


மனதில் நிற்குமே

 மகிழ்ச்சியான சோலை 


நடிப்பு என்பதே 

 ஈர்க்கும் வலை 


நாடகமே தமிழ்தாயின்

 மூன்றாம் பேரலை 


கவலையை தீர்க்கும்

 கருத்தானச் சுலை


கலையை விரும்பாத

 உள்ளமும் இல்லை 




தொண்டுதொட்டு பேணிவந்த

தொன்மையான நாடகக்கலை 


தொடருது வறுமைக்குள்

 கலைஞனின் நிலை 


இரவினில் அரசனாய்

 அரியணையில் இருப்பான் 


பகலினில் பசிக்குள்

 கேட்பாரற்றுக் கிடப்பான் 


வருமானம் இன்றியே 

 வாழ்வினைத் தொலைப்பான் 


வாழும் காலத்தைக்

 கலைக்காய் இழப்பான் 


சிரிக்கவும் வைப்பான்

 சிந்திக்கவும் செய்வான் 


செல்லாக் காசாய்

 சிதலமடைந்து போவான் 


நிசத்தில் நடிக்கத்தான்

 தெரியாத நடிகன் 


நாடகத்தில் என்றுமே 

அவன் சகலகலாவல்லவன் 


கலைகளின் இளவரசி

 நாடகக் கலையே 


கல்நெஞ்சமும் இளகிடும்

 உந்தன் வலையிலே 


போற்றிக் காத்திடுவோம்

 பொறுப்பான மனிதராய் 


மக்களுக்கான கலையாய்

 தொடுப்போம் ஆயுதமாய் 


(கவிஞர் வெ. சங்கர், கிருஷ்ணகிரி)