வலிமையான மனமும்.. தெய்வமும்.. நித்தியஸ்ரீயின் இரு கவிதைகள்!
- வ.ஸ்ரீ.நித்தியஸ்ரீ
தாயும், தந்தையும்,
கண்கண்ட தெய்வம்.
ஒழுக்கமும், கல்வியும்,
காக்கும் தெய்வம்.
சூரியனும், சந்திரனும்,
வாழ்வுக்கான தெய்வம்.
உழவனும், உணவும்,
வாழவைக்கும் தெய்வம்.
பெண்ணும், மண்ணும்,
வாழ்க்கை தெய்வம்.
பிராணியும், வனமும்
இயற்கை தெய்வம்.
--
வலிமையான மனம்
வாழ்க்கை எப்போதும் எளிதல்ல
சில நேரங்களில்
அது கடினமாக இருக்கும்.
சில நேரங்களில்
நாம் சோகமாக இருப்போம்,
சில நேரங்களில்
மகிழ்ச்சியாக இருப்போம்.
விழுந்தாலும்
மீண்டும் எழ வேண்டும்,
அதுதான் நம்மை
வலிமையாக்கும்.
தோல்வி வந்தாலும்
பயப்பட வேண்டாம்,
அது நமக்கு கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்.
நம்பிக்கை இருந்தால்,
நாம் எதையும் செய்ய முடியும்.
ஒவ்வொரு நாளும் முயற்சி செய்தால்,
ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறலாம்.
(வ. ஸ்ரீ. நித்தியஸ்ரீ, ஏழாம் வகுப்பு, ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பண்ருட்டி, கடலூர் மாவட்டம், தமிழ்நாடு)