- தி.மீரா
கவிதை நாள் வந்தது கலைமகள் பாடலாய்
கனிவான சொற்களில் கருவிகள் மலர்கின்ற,
மனதின் ஓவியம் மெல்லிசை ஆகிட,
மௌனத்தின் மொழிகள் வரிகளில் பேசுகின்ற.
எழுத்தின் ஒளியில் எத்தனை உலகங்கள்,
எண்ணத்தின் இறக்கை எட்டாத வானங்கள்,
பாடலாய் பொங்கும் பரவச நெஞ்சங்கள்,
பார்வைக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் இங்கே.
கவிதை என்பது கண்ணீரின் சுவைதான்,
காதலின் மொழியும் காயத்தின் மருந்தும்,
சொல்லாத கதைகள் சொல்லும் கலைதான்,
சொல்லின் வழியே உயிர் பேசும் தருணம்.

கவிஞர்கள் மனதில் கனிந்திடும் நம்பிக்கை
காலத்தை கடக்கும் காற்றாக மாறுமே,
கவிதை நாள் நம்மை கனவுகளால் இணைத்து,
காலமெல்லாம் வாழும் கலைவிழா ஆகுமே.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு: சாமானிய மக்களைக் காக்க இந்தியாவின் அதிரடி நடவடிக்கை
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல்.. 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!
சென்னையில் ஒரு தொகுதி வேண்டும்...திமுக-விற்கு சிபிஎம் நிபந்தனை?
டில்லி வந்தது இதுக்கு தான்... ஒரே போடாக போட்ட டிடிவி தினகரன்
பியூஷ் கோயல் வருகைக்குப் பின் தொகுதிப் பங்கீடு முடிவாகும் - நயினார் நாகேந்திரன் தகவல்
10 க்கும் குறைவான தொகுதிகள்...திருமாவளவன் வேதனை வீடியோ
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி - அன்பழகன் நம்பிக்கை
தமிழகத்தில் குடிநீர் கேன் விலை உயர்வு: 20 ஆண்டுகளுக்குப் பிறகு உற்பத்தியாளர்கள் அதிரடி முடிவு
ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி விதிகள்: HRA சலுகை பெறுவதில் முக்கிய மாற்றங்கள்
{{comments.comment}}