- தி.மீரா
கவிதை நாள் வந்தது கலைமகள் பாடலாய்
கனிவான சொற்களில் கருவிகள் மலர்கின்ற,
மனதின் ஓவியம் மெல்லிசை ஆகிட,
மௌனத்தின் மொழிகள் வரிகளில் பேசுகின்ற.
எழுத்தின் ஒளியில் எத்தனை உலகங்கள்,
எண்ணத்தின் இறக்கை எட்டாத வானங்கள்,
பாடலாய் பொங்கும் பரவச நெஞ்சங்கள்,
பார்வைக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் இங்கே.
கவிதை என்பது கண்ணீரின் சுவைதான்,
காதலின் மொழியும் காயத்தின் மருந்தும்,
சொல்லாத கதைகள் சொல்லும் கலைதான்,
சொல்லின் வழியே உயிர் பேசும் தருணம்.

கவிஞர்கள் மனதில் கனிந்திடும் நம்பிக்கை
காலத்தை கடக்கும் காற்றாக மாறுமே,
கவிதை நாள் நம்மை கனவுகளால் இணைத்து,
காலமெல்லாம் வாழும் கலைவிழா ஆகுமே.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
இளம் அரசு ஊழியர்களை ஒட்டுமொத்தமாக வசீகரித்த தவெக.. திமுகவின் பின்னடைவு!
சட்டசபையை வென்ற கையோடு.. நாடாளுமன்றத்திற்குள்ளும் நுழைய தவெகவுக்கு ஒரு அரிய வாய்ப்பு!
விஜய்யின் எழுச்சி.. தப்புக் கணக்குப் போட்டு விட்டார்களா திராவிடக் கட்சிகள்?
ஆர் பி சௌத்ரி .. அவர் ஒரு அபூர்வம்!
The Clockmaker’s Apprentice.. ஒரு கடிகாரத்தை வைத்து பின்னப்பட்ட கதை!
Strong and of good courage.. இரும்பை விட மேலான வலிமை!
தனித்துவத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும்.. மெல்ல மெல்ல இழந்து வருகின்றோம்!
No one stands closer to you.. மனசாட்சியை விட சிறந்த நண்பர் யார்?
Following your own heart is a brave thing .. அங்க என்ன சொல்லுதோ.. அதுவே சரியானது!
{{comments.comment}}