Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

Jun 22, 2026,12:26 PM IST

- பாரதிராஜன்


பிரசாத் கல்லூரியில் படிக்கும் போது எல்லாரையும் போல்  நிறைய கனவு கண்டான். படிப்பில் படு சுட்டி.        


கதை, கவிதை மற்றும் கட்டுரைப்  போட்டிகளில் நிறைய பரிசுகள் வாங்குவான்.  கல்லூரியில் நடைபெறும் அனைத்துப்போட்டி மற்றும் இதர கல்லூரியில் நடைபெறும் போட்டிகளில் அவன் படிக்கும் கல்லூரி சார்பாக  கலந்து கொண்டு  கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவன்.


பிரசாத்தின் தந்தை நேர்மையான  அரசு ஊழியர். அவர் வேலை செய்யும் அலுவலகத்தில்  கையூட்டு இல்லாமல்  எந்த  வேலையும்  நடைபெறாது.


பிரசாத்  கல்லூரியில் படித்த காலத்தில் கன்னியாகுமரியில்  நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய  போது அவன் தந்தை மகன் கேட்ட தொகை ரூபாய் 2,500/_ இல்லை என்று சொன்னார்.


பிரசாத்தின் நண்பன் சிவராஜ், சிவராஜின் தந்தையும், பிரசாத்தின் தந்தையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். இதில் சிவராஜின் தந்தை கையூட்டு வாங்காமல் எந்த வேலையும் செய்ய மாட்டார்.


சிவராஜ் கன்னியாகுமரி செல்ல, அவன்கேட்ட தொகை மற்றும் கைச்செலவுக்கென்று ரூ.3,000/_கொடுத்து அனுப்பினார். சிவராஜ்  பிரசாத்தை அந்த நிகழ்வுக்கு தன்தந்தை கொடுத்த ரூபாயில் கூட வருமாறு அழைக்க,பிரசாத் மறுத்துவிட்டான்.


கன்னியாகுமரி சென்ற கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும், கடலில் குளிக்க சென்றதில் கடல்அலையில் சிக்கி அதில் சிவராஜ் அலையில் சிக்கி, படுகாயப்பட்டான்.




அதன்பிறகு  சென்னைக்கு திரும்ப வந்து இரண்டு மாதம் கல்லூரி போக முடியாத நிலை. பிரசாத் தன் நண்பன் நிலைக்கண்டு  ரொம்ப வருத்தப்பட்டான். பிரசாத் வழக்கறிஞராக ஆசைப்பட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினான். பிரசாத்தின் தந்தை தன்மகன் மாவட்ட ஆட்சியராக பணிபுரிய விரும்பி  அதற்கேற்ற வகுப்பில் சேர்த்து பிரசாத் ஐ.ஏ.எஸ் ஆனான். பிரசாத்தின் கனவு நிறைவேறாமல் ,அவன் தந்தைக்காக வீட்டுக்கொடுத்தான் பிரசாத்.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்