மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

Aug 10, 2026,05:30 PM IST

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சுகாதாரத்துறை சார்பில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


பள்ளித் தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேவகோட்டை நகராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மேரி, ஆரோக்கிய செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு 400 மி.கி. அல்பென்டசோல் மாத்திரைகளை வழங்கினர்.




நிகழ்ச்சியில் செவிலியர்கள் பேசுகையில், மாணவர்கள் இனிப்பு உணவுகளை குறைத்துக்கொண்டு, கீரை மற்றும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்பும், விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகும் கை, முகம், கால்களை நன்றாக கழுவ வேண்டும். இதன் மூலம் குடற்புழு முட்டைகள் உடலுக்குள் செல்வதைத் தடுக்க முடியும் என அறிவுறுத்தினர். ஆசிரியர் ஸ்ரீதர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.


5 முதல் 13 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ரத்தசோகை உள்ளிட்ட பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

news

சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

news

தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்

news

தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்

news

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!

news

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

news

சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!

news

நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!

news

மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்

அதிகம் பார்க்கும் செய்திகள்