என்னவளே!

Jun 22, 2026,04:10 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நான் பண்ணிய

புண்ணியம் யாவையும் 

உந்தனை என்னிடம் 

சேர்த்ததுவோ!


நான் செய்த தவமோ

எனது வேண்டுதலின் பலனோ

நீயும் என்னை 

விரும்புவதோ!


பற்றினேன் பற்றற்றான் பற்றினை

அவன் கொணர்ந்து 

தந்தானோ

உன்னை என்னிடம்!




நான் உன்னை விரும்புவதும் 

நீ என்னை விரும்புவதும் 

பூர்வ ஜென்ம 

தொடர்கதையோ!


முற்களாய் இருந்தேன்!

முல்லை மலராய் மாற்றினாய்! 

மூங்கிலாய் இருந்தேன்!

புல்லாங்குழலாய் ஆக்கினாய்! 


இறைவன் கருணை 

காட்டினான்! 

வாழ்வே இனிதாய் 

ஆக்கினான்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

அன்பென்றாலே அப்பா

அதிகம் பார்க்கும் செய்திகள்