- பன்முகக் கவிஞர் க.முருகேஸ்வரி
ஆண்டுவிழா நேரம். எனக்கு சற்று வேலைப்பளு அதிகம். மாணவர்களிடம் ஆண்டுவிழாவிற்கு நாடகம் போடலாம் என்று கூறியிருந்தேன்...
நான் வகுப்பிற்குள் நுழையும் போதெல்லாம் நாடகம் நாடகம் என்று நச்சரித்தார்கள்...
தமிழில் கண்ணகி நாடகம் போடலாமா என்று கேட்டேன்.., ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் அந்தப் பாடம் இருப்பதால்....மிஸ் நாங்களே படிச்சுக்கிறோம்... உங்களைத் தொல்லை பண்ண மாட்டோம் என்றார்கள் சின்ன வாண்டுகள்....
மறுநாள்
வகுப்பிற்குள் நுழைந்ததுமே....மிஸ் நாடகம் ரெடி என்றார்கள்....
யார்..யார்... என்ன கதாபாத்திரம் என்றும் என்னிடம் கூறினார்கள்.....
யோகிணி_கண்ணகி
வசுமிதா_பாண்டிய மன்னன்
தர்ஷன்_வாயிற்காவலன்
கீர்த்தி _பாண்டிமாதேவி

நடித்துக் காட்டட்டுமா என்றும் கூறினார்கள்...சரி என்றேன்....
நான் எதிர்பார்க்கவேயில்லை...என் மாணவச் செல்வங்கள், அவ்வளவு அழகாக...சத்தமாக... உணர்ச்சிப் பெருக்குடன் டயலாக் பேசி...மாஸ் பண்ணி விட்டார்கள்...
என்னிடம் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து.... ராஜாவுக்கும்,ராணிக்கும் கிரீடம் செய்யுங்கள்....செங்கொல் ஒன்று,சிலம்பு ஒன்று செய்து கொள்ளும்படி கூறினேன்...
அதையும் நேர்த்தியாக செய்து முடித்தார்கள்....
ஆண்டுவிழா வந்தது....என் தங்கங்களின் நாடகத்தை அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள்....
அமைதியின் சிகரம் யோகினி அவளின் நீளமான கூந்தலை விரித்து விட்டு வெறிகொண்டு பேசியது இன்னும் கண்களிலேயே நிற்கிறது....
பாண்டிமாதேவியாக நடித்த என் செல்லக்குட்டி கீர்த்தி கடைசியாக அரசே..அரசே...என்று அரியணையில் சாய்ந்ததைப் பார்த்து மக்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்....
சிறப்பு விருந்தினரும் குழந்தைகள் நடித்த நாடகத்தைப் பாராட்டி பேசினார்....
நான் மெய்மறந்து என் மாணவச் செல்வங்களையே பார்த்தேன்... என் பிள்ளைகள் ஆயிற்றே.. என்று பெருமிதம் கொண்டேன்..
அட்டகாசம் தொடரும்
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).
வகுப்பறையில் ரீல்ஸ் பண்ணாதீங்கப்பா.. தவெகவினருக்கு அண்ணாமலை அட்வைஸ்!
விநாயகர் துதி
திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்!
மிஸ்.. நாடகம்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!
Fathers Day 2026.. அப்பா என்பவர்.. நம் உயிர் மட்டுமல்ல!
ஜூலை 1 முதல்.. புத்தெழுச்சி பெறப்போகும்.. 125 நாள் ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தரக் கூடாது.. மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம்
மேகதாது அணை விவகாரம்... ஜூலை 23 டெல்லியில் ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
தவெக.,விற்கு எதிரான குதிரை பேர வழக்கு தள்ளுபடி...உச்ச நீதிமன்றம் அதிரடி
{{comments.comment}}