தென்றலே என்னைத் தொடு.....!

Su.tha Arivalagan
Apr 29, 2026,12:21 PM IST

- கவிஞர் மு.வரதகுமாரி


இயற்கையின் பசுமையில் 

இனிமையாய்ப் பிறந்து வருபவளே!!


பொதிகை மலையிலே புறப்பட்டு

தவழ்ந்து வருபவளே!!


மனித மனத்தை மட்டற்ற மகிழ்ச்சியாய் மாற்றுபவளே!!


புத்தம் புதிய பூவினத்தைப் பூக்கச் செய்பவளே!!


சூரியனின் கொடுமையிலும்

குளிர்ச்சியைத் தர நினைப்பவளே!!


மாலைப் பொழுதை மகிழ்விக்க நடனமாடி  வருபவளே!!




ஆழிக்கரையருகே அனைவர் மனத்தையும் கொள்ளை கொண்டவளே!!


புழுக்கத்திலும் புன்னகை பூக்கும் புதுமை கொண்டவளே!!


வியர்வைக்கு மருந்தாய், வெயிலுக்கு விருந்தாய்த், திகழ்பவளே!!


இப்போது என் நிலை உனக்குத் தெரியாதா?


விரைந்து, விழைந்து தென்றலே என்னைத் தொடு!


(கவிஞர் மு. வரதகுமாரி,  திருச்சி)