- ஒளவை அ.ர. தீபா ரவி
சற்று மேலே பார்க்கிறேன் பரந்து விரிந்த வானம்
வியந்து தான் போகிறேன்
பகலில் பளிச்சென்றும்
இரவில் விண்மீன் கூட்டத்தோடு செல்லுண்ட குடையாய்
மிளிரும் காட்சி..
அப்படியே கீழே சுற்றிப் பார்க்க ஓரறிவு முதல் ஏழாம் அறிவு வரை அதிசயங்கள்
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல புல்வெளிகள்
உயிர்க்கோளமாய்
அன்னை பூமி

நாகரிக நகரம்
வாசல் எதுவெனத் தெரியாத வண்ணம் பெட்டி பெட்டியாய்
அடுக்ககங்கள்..
சிற்றூரில் நிழற்குடையாய் மரங்கள் செடிகள் கூடவே தொங்கும் தோரணமாய்க் கொடிகள்..
காற்றோடு தலையசைத்து தாலாட்டுப் பாடிட
அமைதி வாழ்வின்
அடையாளமாய்
மனிதர்கள் மட்டும் ஏனோ
நிற்க பேச புன்முறுவல் பூக்க நேரமின்றி.
பணத்தின் பின்னால்
ஓடிக்கொண்டே இருக்கும் நிலைதான் ஏனோ..
மறு வாய்ப்பு தருவதில்லை என்பதை மறந்தனர்
என்பது தெளிவு..
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}