- ஒளவை அ.ர. தீபா ரவி
சற்று மேலே பார்க்கிறேன் பரந்து விரிந்த வானம்
வியந்து தான் போகிறேன்
பகலில் பளிச்சென்றும்
இரவில் விண்மீன் கூட்டத்தோடு செல்லுண்ட குடையாய்
மிளிரும் காட்சி..
அப்படியே கீழே சுற்றிப் பார்க்க ஓரறிவு முதல் ஏழாம் அறிவு வரை அதிசயங்கள்
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல புல்வெளிகள்
உயிர்க்கோளமாய்
அன்னை பூமி

நாகரிக நகரம்
வாசல் எதுவெனத் தெரியாத வண்ணம் பெட்டி பெட்டியாய்
அடுக்ககங்கள்..
சிற்றூரில் நிழற்குடையாய் மரங்கள் செடிகள் கூடவே தொங்கும் தோரணமாய்க் கொடிகள்..
காற்றோடு தலையசைத்து தாலாட்டுப் பாடிட
அமைதி வாழ்வின்
அடையாளமாய்
மனிதர்கள் மட்டும் ஏனோ
நிற்க பேச புன்முறுவல் பூக்க நேரமின்றி.
பணத்தின் பின்னால்
ஓடிக்கொண்டே இருக்கும் நிலைதான் ஏனோ..
மறு வாய்ப்பு தருவதில்லை என்பதை மறந்தனர்
என்பது தெளிவு..
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்
கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!
திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!
‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!
NEET Exams: நாடு முழுவதும் டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 வரை தற்காலிக தடை
TVK Govt.. இது விஜய் மாடல் அரசு.. சட்டசபை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் புகழாரம்!
எம்எல்ஏ.,க்களுக்கான பயிற்சி முகாம்... குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
தேவர்களின் மாலைக்காலம்.. சிவ வழிபாட்டுக்கு உகந்தது.. ஆனி மாத சிறப்புகள்!
தீதறு தெளிவு கொள்.. செய்வது துணிந்து செய்.. நிறத்தால் அல்ல நெஞ்சால் வாழ்க!
{{comments.comment}}