ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்.. தேன் தமிழ் மொழியாள் !

Su.tha Arivalagan
Jul 31, 2026,01:06 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


ஆடியில் ஆடி வரும் மெல்லிடையாள்

அவள் தேன் தமிழ் மொழியாள்


சில்லென்று பூத்த செவ்வந்தி


சிரிப்பில் அவள்

சிங்கார முல்லை


தென்றல் தாலாட்ட

மெல்ல உறங்கின செம்பருத்தி




பறிக்க யாருமில்லை

தானே இறங்கி வந்தாள் பவழ மல்லி.


மனம் கவர்ந்த 

கள்ளி மனோரஞ்சிதம்


தினமும் என் மடியில் தவழும் நித்தியமல்லி


இரவும் நிலவும்

உறங்கும் நேரம் இது ,இனியும் நீ வராதது ஏனோ?


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர்,பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)