- ப.வினு
நீ
வார்த்தைகளைச் செலவழிப்பதில்
அவ்வளவு கஞ்சத்தனம் செய்கிறாய்.
ஒரு சிறிய புன்னகை,
லேசான தலையசைப்பு,
அல்லது 'ம்' என்ற ஒற்றை எழுத்து—
இவ்வளவுதான்
உன் அன்றாட உரையாடல்.
ஆனால்,
நீ பேசாமல் விட்டுவிடும்
அந்தப் பெரிய இடைவெளிகளில்தான்
நான் அலையாய் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நீ அளந்து பேசும்
ஒவ்வொரு சொல்லும்
அவ்வளவு கனமாக இருக்கிறது.
அவற்றைத் தூக்கிக்கொண்டு திரியவே
எனக்கு ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது.
அதிகம் பேசும் இந்த மனிதர்களின் உலகில்
உன் மௌனம் ஒரு தீவைப்போலத் தனித்திருக்கிறது.
எனக்குத் தெரியும்,
வார்த்தைகளின் ஆபத்தை
நீ நன்றாக அறிந்திருப்பதால்!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}