Tamil Poem: கருவேப்பிலை !

Su.tha Arivalagan
Jul 06, 2026,12:11 PM IST

- விஜயலக்ஷ்மி கண்ணன்


கடன் வாங்கியாவது என்னை

சமையலில் உபயோகிக்கும் மக்கள் 

கோடான கோடி!


உண்ணும்போது தனியாக எடுத்து வைக்கிறார்கள், வேண்டாதபடி!


அடை,வடைக்கு,போட்டு அரைத்து 


என்னை உண்டு இல்லை ஆக்கிவிடுகிறார்கள் உள்ளபடி!




பாட்டி வைத்தியம்

பேத்திகள் தலைக்கு 


எண்ணெயில் கரைத்து காய்ச்சி விடுவார்கள் இப்படி.


உருத் தெரியாமல் போய் விடுகிறேன் கண்டபடி!


(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)