ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!
Apr 15, 2026,05:04 PM IST
- கவிஞர் யாழ் கருணா
ஓர் நதி
ஓர் பௌர்ணமி
ஓர் ஓடம்
மனம் மயக்கும் மாலை நேரம்
தன்னை இரவிடம்
இழக்கும் வேளை..
வான் வீதியில் உலா வரும்
பௌர்ணமியின் பொன்னாடையில் மின்னும் நதி..
மதிமயங்க கிறக்கம் சூழ உறங்காத விழிகள் நதியோரம் வழி தேட..
நிலவொளியில் நதி மெல்ல நடைபயில
வளைவுகளின் நளினம்
வஞ்சியவள் இடையினமோ…
படகிலேறி அமர்ந்த என் கைகள் துடுப்புகளாக
இயற்கைப் பேரழகியின் அணைப்பில் என்னை மறந்தேன்…