ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம்!

Su.tha Arivalagan
Apr 15, 2026,05:04 PM IST
- கவிஞர் யாழ் கருணா

ஓர் நதி 
ஓர் பௌர்ணமி
ஓர் ஓடம் 

மனம் மயக்கும் மாலை நேரம்
தன்னை இரவிடம் 
இழக்கும் வேளை..

வான் வீதியில் உலா வரும் 
பௌர்ணமியின் பொன்னாடையில் மின்னும் நதி..

மதிமயங்க கிறக்கம் சூழ உறங்காத விழிகள் நதியோரம் வழி தேட..

நிலவொளியில் நதி மெல்ல நடைபயில
வளைவுகளின் நளினம் 
வஞ்சியவள் இடையினமோ…





நதியின் தாலாட்டில் 
அழகாய் ஆடிய ஓடம் ஒன்று துடுப்புகளின்றி தவழ்ந்து தளர…

படகிலேறி அமர்ந்த என் கைகள் துடுப்புகளாக 
இயற்கைப் பேரழகியின் அணைப்பில் என்னை மறந்தேன்…

(கவித்துளி  கற்பனையின் ஊற்று கவிதையின் காற்று.. ஓர் நதி ஓர் பௌர்ணமி ஓர் ஓடம் எனும் தலைப்பில் கவிஞர் யாழ் கருணா வடித்த கவிதை இது. இலங்கையைச் சேர்ந்த யாழ் கருணா தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார்)