தெரிந்தும் தெரியாது என்கிறாய்?
Dec 22, 2025,04:21 PM IST
- கவிஞர் சு நாகராஜன்
குடி குடியை கெடுக்கும்- என
தெரிந்தும் குடிக்கிறாய்
புகை ஊதினால்
புற்றுநோய் உண்டாகும் -எனத்
தெரிந்தும் புகைக்கிறாய்
திருடினால்
திருடன் பட்டம் பெறுவாய் -என
தெரிந்தும் திருடுகிறாய்
வேகமாய் சென்றால்
விபத்து ஏற்படும் -என
தெரிந்தும் வேகமாய் செல்கிறாய்
வருமானம் மீறி
கடன் வாங்கினால்
கஷ்டம் உண்டாகும்- எனத்
தெரிந்தும் வட்டிக்கு
பணம் பெறுகிறாய்
கல்வி அறிவு இல்லாமல்
கற்றவர் சபையில்
இடமில்லை- எனத்
தெரிந்தும் கல்வியை
புறக்கணிக்கிறாய்
உழைத்தால் தான்
ஊதியம் உண்டு- எனத்
தெரிந்தும் உழைக்காமல்
நேரம் வீணாக்குகிறாய்
எல்லாம் தெரிந்து
செய்துவிட்டு- நான்
தெரியாமல் செய்து விட்டேன்
என்று மனம் வருந்தும்
(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)