- க .யாஸ்மின் சிராஜீதீன்
இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும்
நிச்சயமாக வரலாறு படைக்கும்...
வெற்றியின் வரலாறு ஊக்கம் தரும்
தோல்வியின் வரலாறு
வெற்றிக்கான வழிகளைக்காட்டும்..
தோல்வி தரும் வெற்றிக்கு முகவரி
வெற்றி சொல்லும் தோல்வி என் படிக்கட்டு என்று....

இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் மனம் சாதனைபடைக்கும்...
படபடக்கும் மனம் படி ஒன்றுகூட ஏறாது....
வெற்றி தோல்வி சகஜம்தான்
கண்டிப்பாக இரண்டில் ஒன்று கிடைத்தே தீரும்தான் ....
முயற்சியும் காலமும் கைகோர்த்திடும்
தோல்வியையும் வெற்றி ஆக்கிடும்...
தோல்வியை சந்திக்காதவர்கள் இல்லை
வெற்றியை அடையாமலும் இல்லை...
தோல்வி தரும் பாடங்கள் நம்மை பண்படுத்தும்...
வெற்றியை நோக்கிய நம்
வீரநடைக்கு உருவளிக்கும்.....
வெற்றி தோல்வி கலந்துதான் வாழ்க்கை..
வாழ்வோம் நமக்காக வீழ்ச்சிகளை படியாக்கி,
புகழ்ச்சிகளை ஊக்கமாக்கி,
ஏளனங்களை ஏணியாக்கி
சிகரம் தொடுவோம் சிறகுமுளைத்த பருந்தாய்....!
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
அதிமுகவால் சொல்ல மட்டுமே முடியும்: எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதில்!
தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல வெறும் 0 தான் : எடப்பாடி பழனிச்சாமி
தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தவெக தலைமை அலுவலகம் அருகே குவிந்த தொண்டர்கள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
விஜய்க்கு நீதிபதி கொடுத்த 2 ஆப்ஷன்... அடுத்து என்ன செய்ய போகிறார்?
தங்கத்தை வீட்டில் பூட்டி வைக்காதீர்கள்: முதலீட்டாளர்களுக்கு முகேஷ் அம்பானி அறிவுரை
பீகார் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான பிரசாந்த் கிஷோரின் மனு தள்ளுபடி
பிப்ரவரி 28 இல்லங்க... மார்ச் 1... பிரதமர் மோடி தமிழகம் வருகையில் மாற்றம்!
சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
{{comments.comment}}