சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Feb 06, 2026,05:24 PM IST

சென்னை: சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில் கார்ல் மார்க்ஸின் பிரம்மாண்ட வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தபடி, உலகப் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணரான கார்ல் மார்க்ஸின் (Karl Marx) முழு உருவச் சிலையைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் திறந்து வைத்துள்ளார். கார்ல் மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும் பகுதியை நூலகங்களிலேயே செலவிட்டவர் என்பதால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற கன்னிமாரா நூலக வளாகம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டது. 




அதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் மற்றும் அரசு அருங்காட்சியக வளாகம் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்புடன், கார்ல் மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியையும் முதல்வர் பார்வையிட்டார். மேலும், அவரது பங்களிப்புகள் குறித்த குறும்படமும் அங்கு திரையிடப்பட்டது.


விழாவில் பேசிய முதல்வர், "திராவிட மாடல் அரசும், மார்க்சியச் சிந்தனைகளும் 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற ஒற்றை இலக்கை நோக்கியே பயணிக்கின்றன" என்று குறிப்பிட்டார். 1931-லேயே தந்தை பெரியார் 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை' தமிழில் மொழிபெயர்த்ததை அவர் நினைவு கூர்ந்தார். இந்த விழாவில் திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, செல்வப்பெருந்தகை , மற்றும் இடதுசாரி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்