எண்ணம் போல் வாழ்க்கை!

Su.tha Arivalagan
Feb 23, 2026,11:41 AM IST

- சி.குமரேஸ்வரி


எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை சிறக்கும்,

இனிமை மலர இதயம் மலரும்.

மனது நல்லதை மட்டுமே நினைக்கட்டும்,

பொறாமை, கோபம் ஆகியவற்றை மறப்போம்.


நல்ல விதை, நீர், சூரியன் செடிக்கு தேவை;

அன்பு, நேசம், நற்சிந்தனை நமக்கு தேவை.

நற்சிந்தனை உயர்வை தரும்,

உலகம் உன்னை உற்று நோக்கும்.




எண்ணம் தூய்மையாக, 

உண்மையாக இருக்கட்டும்;

உறுதியும் மனதில் கொண்டு 

இலக்கை அடைவோம் எளிதாக.

ஒளிமயமான எதிர்காலம் 

நம் கரம் பிடித்து நிற்கும்,

காலம் நம் நிலை உயர்த்தும்.


எண்ணத்தின் அமைதி, நம்பிக்கை 

ஏணி போல் ஏற்றும் நம்மை,

வாழ்க்கை வசந்தமாகும்.

எண்ணம் போல் வாழ்க்கை.


(குமரேஸ்வரி சி, பட்டதாரி ஆசிரியர் -ஆங்கிலம், விகே அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்காளிப்பாளையம், திருப்பூர்)