- கா.சா. ஷர்மிளா
மொழி என்பது இனத்தின் பண்பாடே ....
பண்பாடு என்பது இனத்தின் அடையாளமே ...
அடையாளம் தமிழ் மொழியின் வரலாறே ...
வரலாற்றின் இலக்கியங்களாக.. காப்பியங்களாக..
இலக்கண இலக்கியங்களாக...
என் அன்னை தமிழ் நிற்பவள்..
அமுதுக்கு நிகராக
உயிருக்கு மேலாக
பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிற்பவள்..
எங்கும் இனிமை
எதிலும் செழுமை
அனைத்திலும் வளமை
கவிகளுக்கு புலமை
எம்மொழியிலும் இல்லா
தமிழனுக்கு அடையாளமாக
வலம் வருபவள்..
காதல் உணர்வு பொங்கும் மொழியாக..
தேனினும் இனிய மொழியாக..
தெவிட்டாத செந்தமிழாக..
எண்ணங்களின் கோர்வையாக..
கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக..
என்றென்றும் நிற்பவளே...
என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...
என் எண்ணங்களை ஒளிரச் செய்த தமிழே...
என் இதய நாளங்களை மீட்டிய தமிழே...
உன்னை வணங்குகின்றேன் போற்றுகின்றேன்
உலக தாய்மொழி நாளிலே...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
Egypt Tour Diary: பேசும் சிலை!
தினம் தினம் கொண்டாட்டமா?
கொசுவின் அங்கலாய்ப்பு!
மறைந்தாலும் நன்று...!
உனைப் போற்றி வாழ்கின்ற என்னை வாழ வைக்கிறாய்!
வட்ட நிலா பொட்டுக்காரி வாழைப்பூக் கொண்டக்காரி
{{comments.comment}}