- கா.சா. ஷர்மிளா
மொழி என்பது இனத்தின் பண்பாடே ....
பண்பாடு என்பது இனத்தின் அடையாளமே ...
அடையாளம் தமிழ் மொழியின் வரலாறே ...
வரலாற்றின் இலக்கியங்களாக.. காப்பியங்களாக..
இலக்கண இலக்கியங்களாக...
என் அன்னை தமிழ் நிற்பவள்..
அமுதுக்கு நிகராக
உயிருக்கு மேலாக
பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிற்பவள்..
எங்கும் இனிமை
எதிலும் செழுமை
அனைத்திலும் வளமை
கவிகளுக்கு புலமை
எம்மொழியிலும் இல்லா
தமிழனுக்கு அடையாளமாக
வலம் வருபவள்..
காதல் உணர்வு பொங்கும் மொழியாக..
தேனினும் இனிய மொழியாக..
தெவிட்டாத செந்தமிழாக..
எண்ணங்களின் கோர்வையாக..
கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக..
என்றென்றும் நிற்பவளே...
என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...
என் எண்ணங்களை ஒளிரச் செய்த தமிழே...
என் இதய நாளங்களை மீட்டிய தமிழே...
உன்னை வணங்குகின்றேன் போற்றுகின்றேன்
உலக தாய்மொழி நாளிலே...
(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)
கோவை கொடூரம்.. கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவு.. முதல்வர் விஜய்
அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனிடம் கோரிக்கை!
South West Monsoon: தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: சென்னையில் சட்டென மாறிய வானிலை
Chettinadu Recipe: தேன் போல தித்திக்கும்.. மாம்பழ குல்ஃபி ஐஸ்!
கோவை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அதிர்ச்சியில் தமிழ்நாடு.. அனைத்துக் கட்சிகளும் கடும் கண்டனம்
தவெக அரசில் சேர முடியாமல் போச்சே.. தனிச் சின்னத்தில் போட்டியிடாததால் வருந்தும் கட்சிகள்?
மே 23 ஆமைகள் தினம்.. மாணவர்களுக்கான நீதி கதை.. "கடைசியாக வந்த கோமதி"
Kalaimani: சிந்தனை.. எப்போது வெற்றி கிட்டும்!
Tamil Poem by Sasikala Viswanathan: அவலம்!
{{comments.comment}}