என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...!

Feb 21, 2026,03:31 PM IST

- கா.சா. ஷர்மிளா


மொழி என்பது இனத்தின் பண்பாடே ....

பண்பாடு என்பது இனத்தின் அடையாளமே ...

அடையாளம் தமிழ்  மொழியின் வரலாறே ...


வரலாற்றின் இலக்கியங்களாக.. காப்பியங்களாக..

இலக்கண இலக்கியங்களாக...

என் அன்னை தமிழ் நிற்பவள்..


அமுதுக்கு நிகராக 

உயிருக்கு மேலாக 

பண்பாட்டுக் கலாச்சாரத்தின் அடையாளமாக நிற்பவள்..




எங்கும்  இனிமை

எதிலும் செழுமை 

அனைத்திலும் வளமை

கவிகளுக்கு புலமை

எம்மொழியிலும் இல்லா

தமிழனுக்கு அடையாளமாக

வலம் வருபவள்..


காதல் உணர்வு பொங்கும் மொழியாக..

தேனினும் இனிய மொழியாக..

தெவிட்டாத செந்தமிழாக..

எண்ணங்களின் கோர்வையாக..

கருத்துக்களை வெளிப்படுத்தும் களமாக..

என்றென்றும் நிற்பவளே...


என்னுள் என்னைக் காண வைத்த தமிழே...

என் எண்ணங்களை ஒளிரச் செய்த தமிழே...

என் இதய நாளங்களை  மீட்டிய தமிழே...

உன்னை வணங்குகின்றேன் போற்றுகின்றேன் 

உலக தாய்மொழி நாளிலே...


(கவிஞர் கா.சா.ஷர்மிளா, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம், பு. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (இந்து)யில் பணியாற்றுகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் நாளை திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

தெறிக்க விட்ட 'Thalaivar 174'டீசர்...ஹீரோ ரஜினியா? கமலா?...இவ்வளவு விஷயம் பண்ணிருக்காங்கலே

news

சீமான் போட்டியிடப் போவது எங்கே.. திருச்சி மாநாட்டில் 234 வேட்பாளர்களை அறிவிக்கிறார்!

news

கே. என். நேரு வசம் 41 தொகுதிகள் மட்டுமல்ல.. திமுகவின் மொத்தக் கோட்டையுமே இருக்கு!

news

திமுக அமைத்துள்ள 7 பேர் குழு...கூட்டணி கட்சிகளிடம் இவர்கள் என்ன பேசுவார்கள்?

news

கமல்ஹாசனின் நம்பிக்கை.. ரஜினிகாந்த்தின் பெருந்தன்மை.. பெயரில் என்ன இருக்கு?

news

என்ன சார் சொல்ல வர்றீங்க?...திமுக கூட்டணி பற்றி கமல் சொன்ன பதில்...குழம்பிய செய்தியாளர்கள்

news

47 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்!

news

தாய் மொழியாகிய தமிழ் மொழியே நம் தமிழரின் தனி அடையாளமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்