- வீ.தமிழ்ச்செல்வி
அவன் எதையோ தேடிக் கொண்டிருக்கிறான். நடுக்கூடத்தின் வலது புறத்தில் உள்ள அறையில் இருக்கும் அலமாரி முழுவதும் தேடிக் கொண்டிருக்கிறான். அங்கே ஓரமாய் ஒரு இரும்பு பெட்டி அதையும் திறந்து திறந்து மூடுகிறான். பின் குட்டி போட்ட பூனை போல் அங்கும் இங்கும் உலாவி, தான் தொலைத்த எதையோ தேடிக் கொண்டிருக்கிறான்.
பரண், மேடை, கூடை, மற்றும் கூரையின் உச்சத்தில் எல்லாம் தேடிப் பார்க்கிறான். திடீரென்று 'வீர், வீர்' என்று கத்துவதற்கு ஆரம்பித்து விட்டான். இவ்வளவு நேரம் அங்கு குடி கொண்டிருந்த அமைதி .. ஒரு சில நொடிப்பொழுதில் தாங்க முடியாத அளவிற்கு ஒரு இரைச்சலை உருவாக்கியது அவனின் அழுகை.. அவன் இப்படி அழுது, புலம்பி நாங்கள் பார்த்ததே இல்லை.. திடீரென்று அழுகையை நிறுத்திவிட்டு வீட்டின் கொல்லப்புறத்திற்கு ஓடினான். அங்கே ஒரு கிணற்றிற்கு அருகில் அடுக்கி வைத்திருந்த செங்கற்களை நகர்த்தி தேடினான் அங்கும் அவன் தேடியது அவனுக்கு கிடைக்கவில்லை.

மீண்டும் மீண்டும்.. கதறி , அலறி கண்ணீர் விட்டான்.. ஆண் குழந்தைகள் அழமாட்டார்கள்.. என்று அங்கே ஒரு குரல்.. ஆனால் நீண்ட நேரமாக கத்திய அந்த குழந்தை நா வறண்டு விம்மல் எடுக்க துவங்க .. எல்லொரும் குழப்பத்தில் இருந்த அந்த குழந்தையிடம்.. என்ன தேடுற? என்றார்கள்.. அவனோ சற்று யோசித்து.. என் நீல நிற ராசிக்கல் .. காணவில்லை.. என்றான்..
ஒரு சிறிய கல்லிற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தாயா? என்று வினவினார்கள். சரி நான் சந்தைக்கு போனால் புதிய கல் வாங்கி தருகிறேன் என்று ஒருவர் வாக்கு கொடுக்க .. அவனும் அமைதியாய் சென்று விட்டான்.. கொஞ்ச நேரத்தில் அவன் தேடலை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்தான். நாட்கள் சென்றன. பிறகு அந்த கல்லை அவ்வப்போது வீட்டில் கேட்டிருப்பான், தேடியும் இருப்பான். பின் குழந்தை பருவம் முடித்து உயர்கல்வி பயில வெளியூர் சென்று விட்டான். இப்போது அந்த கல்பற்றி அவனுக்கு நினைவே இல்லை.

அந்தக் கல்லுக்காக அவன் அழுததை வீட்டில் அனைவரும் நகைச்சுவையாய் பேசி சிரிப்பதும் உண்டு. பிறகுதான் ஒரு உண்மையை அறிந்து கொண்டான். தன் தம்பி அந்தக் கல்லை எடுத்துக்கொண்டு போய் தன் நண்பர்களிடம் பந்தயம் வைத்து தோற்றுவிட்டான் என்பதையும், அந்தக் கல் அங்கே இல்லை என்பதை அறியாமல் தான் தொடர்ச்சியாக தேடியதையும் நினைத்து சிரித்துக்கொண்டான்..
இப்படித்தான் சில இழப்புக்கள் காலம் கடந்த பின் பெரிய இழப்புகளாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. சில நேரங்களில் நம் செயல்களின் விளைவை சந்திக்க பயந்து ஒளிந்து கொள்கிறோம்.. அந்த நேரத்தில் விடுதலைக்காக மட்டுமே நம்மிடமிருந்தே நாம் தப்பிக்க முயல்கிறோம்.
(வீ. தமிழ்ச்செல்வி, அஉபள்ளி, அங்கு செட்டிபாளையம், பண்ருட்டி)
நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்
Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!
ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?
ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்
ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்
சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!
ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!
மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்
{{comments.comment}}