Poem: ஆத்தோரம் பூத்த கன்னி

Jul 08, 2026,12:30 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்

ஆத்தோரம் பூத்தவளே 
அழகு வண்ண ரோஜாவே
சேத்துல பூத்திருக்கும் 
செவ்வரளிப் பூச்சரமே

மலர்ந்து சிரிப்பவளே 
மனம் வீசும் பூங்கிளியே
காத்துலே வாசம் வந்து 
கலக்குதடி ஏ மனசே

மானே மரகதமே 
மாமன்காரன் பெத்தவளே
தேனே திரவியமே 
தெவிட்டாத தெள்ளமுதே 

வானம் கருக்குடி
வண்ண மயில் ஆடுதடி
கானக் கருங்குயிலே
காவியமும் பாடுதடி



வாழைக் குருத்தாக 
வளர்ந்திருக்கும் என்னவளே
வாஞ்சையோடு கூப்பிடுறேன் 
வாடி புள்ளே ராசாத்தி

சோடிக் கிளியாக சோலையிலே பாடிடுவோம்
காலையிலே வாடி புள்ளே 
காத்திருக்கேன் தோப்புலதான்

கண்டாங்கி சேலை கட்டி 
கைநிறைய வளையல் இட்டு
நெத்தியிலே பொட்டு வச்சு 
நிம்மதியாய் வாடி புள்ளே

மானா மதுரையிலே 
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
கொண்டையிலே சூடிக்கிட்டு 
குணமுடனே வாடி புள்ளே

தோப்புக்குள்ளே மாமரத்தில் 
தூளி கட்டி ஆடிடலாம்
ஆலம் விழுதாட்டம் 
ஆடி மகிழ்ந்திடலாம்

பந்தங்கள் கூட்டி வந்து 
பரிசமும் போட்டிடுவோம்
மாங்கல்யம் பூட்டி நல்ல 
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்

(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்