Poem: ஆத்தோரம் பூத்த கன்னி

Jul 08, 2026,12:30 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்

ஆத்தோரம் பூத்தவளே 
அழகு வண்ண ரோஜாவே
சேத்துல பூத்திருக்கும் 
செவ்வரளிப் பூச்சரமே

மலர்ந்து சிரிப்பவளே 
மனம் வீசும் பூங்கிளியே
காத்துலே வாசம் வந்து 
கலக்குதடி ஏ மனசே

மானே மரகதமே 
மாமன்காரன் பெத்தவளே
தேனே திரவியமே 
தெவிட்டாத தெள்ளமுதே 

வானம் கருக்குடி
வண்ண மயில் ஆடுதடி
கானக் கருங்குயிலே
காவியமும் பாடுதடி



வாழைக் குருத்தாக 
வளர்ந்திருக்கும் என்னவளே
வாஞ்சையோடு கூப்பிடுறேன் 
வாடி புள்ளே ராசாத்தி

சோடிக் கிளியாக சோலையிலே பாடிடுவோம்
காலையிலே வாடி புள்ளே 
காத்திருக்கேன் தோப்புலதான்

கண்டாங்கி சேலை கட்டி 
கைநிறைய வளையல் இட்டு
நெத்தியிலே பொட்டு வச்சு 
நிம்மதியாய் வாடி புள்ளே

மானா மதுரையிலே 
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
கொண்டையிலே சூடிக்கிட்டு 
குணமுடனே வாடி புள்ளே

தோப்புக்குள்ளே மாமரத்தில் 
தூளி கட்டி ஆடிடலாம்
ஆலம் விழுதாட்டம் 
ஆடி மகிழ்ந்திடலாம்

பந்தங்கள் கூட்டி வந்து 
பரிசமும் போட்டிடுவோம்
மாங்கல்யம் பூட்டி நல்ல 
மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்

(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்