விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!

Jun 11, 2026,05:05 PM IST

தேனி: தமிழ் திரைப்பட உலகின் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்படும் முன்னணி இயக்குநர் பாரதிராஜா அவர்களின் உடல், இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் வத்தலகுண்டு காட்ரோடு பண்ணை வீடு வளாகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


கிராமியக் கலைகளையும், மண் வாசனையையும் தமிழ் சினிமாவின் அடையாளமாக மாற்றிய ஒரு சகாப்தம் இத்துடன் நிறைவடைந்துள்ளது.


கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இயக்குநர் பாரதிராஜா, சிகிச்சை பலனின்றி நேற்று இயற்கை எய்தினார். அவரது மறைவுச் செய்தி கேட்டு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், தமிழகமும் சோகத்தில் மூழ்கியது.




பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. தமிழக அரசின் சார்பில், காவல்துறை மரியாதையுடன், குண்டுகள் முழங்க அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னியரசு மற்றும் முக்கியப் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


நடிகர்கள், இயக்குநர்கள், பல்துறைப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து மண்ணின் மைந்தரான பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன் பிறகு இறுதிச் சடங்குகள் தொடங்கின. அவரது தம்பி ஜெயராஜ் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அதன் பிறகு பண்ணை வீட்டு வளாகத்தில் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நடைபெற்றது.


எல்லோரையும் ஈர்த்து வந்த அந்தக் காந்தக் குரல் ஓய்வெடுத்துக் கொண்டது.. மீண்டும் நம் பாசத்துக்குரிய பாரதிராஜா எப்போது வருவார் என்ற ஏக்கத்துடன் மக்கள் கண்ணீருடன் அவருக்கு விடை கொடுத்து விட்டு சோகத்துடன் திரும்பினர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாமகவின் பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு: 341 யோசனைகளை முன்வைத்த அன்புமணி

news

ஜூலை 31 முதல் தமிழ்நாடு முழுவதும் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்

news

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது உண்மையா? புரளியா? நயினார் நாகேந்திரன் கேள்வி

news

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

news

தஞ்சையில் திருமுறை இசை வெளியீட்டு விழா: ஆகஸ்ட் 7-ல் கோலாகலமாக நடைபெறுகிறது!

news

உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

news

தேர்வு முறைகேடு தடுப்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகளின் அமளிக்கிடையே தாக்கல்

news

டெல்லி போராட்டத்தில் காவல்துறை அத்துமீறல்... நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தர்ணா

news

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி

அதிகம் பார்க்கும் செய்திகள்