பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!

Jan 23, 2026,09:06 PM IST

சென்னை: பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிலையில், திமுக அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீதான நம்பிக்கை ஆகியவை குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.


அந்த பதிவில், தமிழ்நாடு என்டிஏ-வுடன் இருக்கிறது. இன்று பிற்பகல் மதுராந்தகத்தில் நடைபெறும் பேரணியில் என்டிஏ தலைவர்களுடன் நானும் கலந்துகொள்ளவிருக்கிறேன். ஊழல் நிறைந்த திமுக ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு மக்கள் முடிவு செய்துவிட்டனர். என்டிஏ-வின் நல்லாட்சி சாதனைப் பதிவும், பிராந்திய மக்களின் விருப்பங்களுக்கு அது அளிக்கும் முக்கியத்துவமும் மாநில மக்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தள பக்கத்தில் மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.




அந்த பதிவில், தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...


தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?


Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?


பாஜகவின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?


தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?


"MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?


பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?


இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?


ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?


கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?


ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?


தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுகவின் சரமாரி தாக்குதலிலிருந்து தப்ப.. அதிமுக, பாஜகவுடன் ஐக்கியமாவாரா தவெக விஜய்?

news

TVK Vijay: தவெக தலைவர் விஜய்யுடன்.. பவன் கல்யாண் பேசி வருகிறாரா.. உண்மை என்ன?

news

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்...நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் நடப்பதில் சிக்கல்

news

குந்தவை த்ரிஷா பற்றி சர்ச்சை கருத்து...மன்னிப்பு கேட்டார் நடிகர் பார்த்திபன்

news

அமெரிக்காவுலதாங்க அதுக்குப் பேரு இறைச்சி பந்து.. நம்ம ஊர்ல என்ன தெரியுமா?

news

கேஸ் சிலிண்டர் புக் பண்ண போறீங்களா?...இந்த புதிய விதிகளை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க

news

தமிழக ராஜ்யசபா தேர்தல்... 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு

news

ஈரான் போர் பதற்றம்..எதிர்க்கட்சிகள் அமளி...வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

news

மார்ச் 12ல் தமிழகம் தழுவிய போராட்டம்...தவெக அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்