ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கே.. ஒதுக்கியது திமுக.. வேட்பாளர் யார்?

Jan 20, 2023,10:03 AM IST
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திமுக கொடுத்து விட்டது. இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கில் போட்டியிட்டது. அதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  முக்கிய வேட்பாளர் யுவராஜா ஆவார்.  இவர் தமாகா சார்பில் போட்டியிட்டார். இரட்டை இலை சின்னத்தில் நின்று தோற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருமகன் ஈவேரா அகால மரணமடைந்தார். இதனால் இத்தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸே போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற விவாதங்கள் எழுந்தன.  மறுபக்கம் அதேபோல தமாகா மீண்டும் போட்டியிடுமா அல்லது அதிமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. இன்னொரு பக்கம் பாஜகவும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

இந்த நிலையில்தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கே ஒதுக்கியுள்ளது திமுக. இடைத் தேர்தல் தொடர்பாக நேற்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்குவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சலசலப்புக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

இடைத் தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் குடும்பத்திலிருந்து ஒருவர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்