சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி என்பது தனிப்பட்ட நபரின் சொத்து அல்ல. தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே பாமகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டியுள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் குறித்து நேற்று தைலாபுரம் தோட்டத்தில் சரமாரியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி பேசியிருந்தார் டாக்டர் ராமதாஸ். இதையடுத்து மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முதல் 3 நாட்களுக்கு ஆலோசனையில் இறங்கியுள்ளார் அன்புமணி ராமதாஸ்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பொறுப்புகள் வரும் போகும். நிரந்தரமான உங்களின் அன்பும் பாசமும் தான் எனக்கு வேண்டும். அந்த பாசம் என்றும் போகாது. உங்களில் ஒருவனாக ஒரு தொண்டனாக நான் நிற்கின்றேன். நமக்குள் வேற்றுமைகள் இருக்க கூடாது. மருத்துவர் ஐயா அவர்கள் நமது கட்சியை தொடங்கியிருக்கிறார். அவரின் கொள்கைகளை மனதில் நிறுத்தி நாம் களத்தில் இறங்கி செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்முடைய இலக்கு. இதை அடைவதற்கு நாம் எல்லோரும் ஒன்றாக இணைந்து பாடுபட வேண்டும். நமக்குள் எந்த வேற்றுமைகளும் இருக்கக் கூடாது. தமிழ் நாட்டில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உங்கள் ஆதரவுகளை கொடுங்கள்.
எதையும் எதிர்பார்த்து வராதீர்கள். ஏமாந்து போவீர்கள். கேள்விக்கு பயந்தவன் நான் கிடையாது. என்ன கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம். சிறப்பு சந்திப்பு விரைவில் நடைபெறும்.
பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி. தனி நபரின் சொத்து அல்ல. தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சி என்பது நானோ இவங்களோ கிடையாது. நீங்கள் தான். நீங்கள் இல்லை என்றால் பாட்டளி மக்கள் கட்சி கிடையாது. பொதுக்குழுவில் முறையாக நீங்கள் எல்லாம் தான் என்னை தேர்வு செய்தீர்கள். உங்களோடு சேர்ந்து ஒரு அடி மட்ட தொண்டனாக நான் செயல்படுவேன். அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து கட்சியை மேம்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!
கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!
தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்
பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 16 கி.மீட்டருக்கு ரோடு ஷோ!
பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!
வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!
{{comments.comment}}