நகைக்கடனுக்கான புதிய விதிகள் தேவையற்றவை.. பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.. டாக்டர் அன்புமணி

May 30, 2025,04:23 PM IST

சென்னை: நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நகைக்கடன் வழங்குவதற்கான 9 வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய வரைவு விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்த நிலையில்  அவற்றில் இரு தளர்வுகளை செய்யும்படி மத்திய நிதியமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. புதிய விதிகள் நடைமுறைக்கு  2025ஆம் ஆண்டு வரை செயல்படுத்தக்கூடாது;  ரூ.2 லட்சம் வரையிலான நகைக்கடன்களுக்கு இந்த விதிகளில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்பது தான்  அந்த பரிந்துரைகள் ஆகும். இவை போதுமானவை அல்ல.


இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள வரைவு விதிகளுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை; அவை இன்னும் இறுதி செய்யப்படவில்லை; அவை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில்  2026 ஜனவரி ஒன்றாம் தேதி முதல்  புதிய விதிகளை செயல்படுத்தலாம் என்பது சலுகை அல்ல.




அதேபோல், கிராமப்புறங்களில் கல்வி, குடும்பத் தேவைகள் மற்றும் வங்கிக் கடன் பெற முடியாத பல தேவைகளுக்கு  நிதி ஈட்டுவதற்கான ஒரே வாய்ப்பு நகைக்கடன் தான்.  அவ்வாறு கடன் பெறும் போது ரூ.2 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டும் புதிய விதிகளில் இருந்து விலக்கு என்பது பயனளிக்காது. 


இவை அனைத்தையும் விட பாட்டாளி மக்கள் கட்சி எழுப்ப விரும்பும் வினா என்னவென்றால், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை எங்கிருந்து வந்தது?  ஒவ்வொரு தனிநபரும்  எவ்வளவு நகைக்கடன் பெறுகிறாரோ, அதை விட குறைந்தது  40% கூடுதல் மதிப்பு உள்ள நகைகளை ஈடாக வைக்கிறார். நகைக்கடனை குறித்த காலத்தில் செலுத்தத் தவறினால் அவற்றை ஏலத்தில் விட்டு பணமாக்கவும் விதிகளில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது புதிய விதிகள் தேவையற்றவை. அதனால், எந்த பயனும் இல்லை, பாதிப்புகள் தான் அதிகம்.


தங்க நகைக்கடன் என்ற  தத்துவமே நடைமுறை சிக்கல்கள் இல்லாமல் எளிதாக கடன் வாங்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான்.  புதிய விதிகளின் மூலம் அதை சிக்கலாக்கக்கூடாது. எனவே, நகைக்கடன்கள் தொடர்பாக இப்போதுள்ள நடைமுறைகளே  தொடர வேண்டும். அது சாத்தியமில்லை என்றால், வரைவு விதிகளின்  பிரிவுகள் 2, 4, 6 ஆகியவற்றை  ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

news

கோடை கால பருவ மழை... இயல்பைவிட 129% அதிகம்... சென்னை வானிலை மையம் தகவல்!

news

தற்போது பரவும் கொரோனா வைரஸ் வீரியம் இல்லாதது... பதற்றம் வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

RIP Rajesh: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷின் உடல் அடக்கம்!

news

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 16 கி.மீட்டருக்கு ரோடு ஷோ!

news

பரவுகிறது கொரோனா.. கேரளாவில்தான் அதிகம்.. வெளியில் செல்லும்போது மாஸ்க் போடுவது நல்லது!

news

வாரத்தின் கடைசி நாளான இன்று... எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்