மின்னணு வாக்கு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்.. மஸ்க் ஆவேசம்.. சப்போர்ட்டுக்கு வந்த ராகுல் காந்தி!

Jun 16, 2024,02:43 PM IST

டெல்லி: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களால் பெரும் ஆபத்து உள்ளது. அதில் முறைகேடு செய்ய முடியும். அதை ஒழிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இதற்கு காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். அதேசமயம், இந்தியாவில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.


அமெரிக்க அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் ராபர்ட் எப் கென்னடி ஜூனியர் ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் ப்யூர்டோரிகா நாட்டில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நல்ல வேளையாக அங்கு வாக்குச் சீட்டுக்களும் பயன்படுத்தப்பட்டதால் சரியான எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. வெறும் இயந்திரங்களில் மட்டும் வாக்குப் பதிவு நடந்திருந்தால் முறைகேடுகள் தெரியாமல் போயிருக்கும். இப்படி வாக்குச் சீட்டுகள் இல்லாமல் நடக்கும் வாக்குப் பதிவுகளின் கதி கவலையைத் தருகிறது.


எலான் மஸ்க்கின் கவலை




அமெரிக்க மக்களுக்கு தாங்கள் அளிக்கும் வாக்குகள் சரியான நபருக்கே போய்ச் சேர்ந்ததா என்பதை அறிவதை நீதித்துறை உறுதி செய்ய வேண்டும். தேர்தல்களில் முறைகேடுகள் ஏற்றுக் கொள்ள முடியாது. மீண்டும் நாம் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டியது அவசியம் என்று அவர் கூறியிருந்தார்.


இதற்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்களாலோ அல்லது செயற்கை நுன்னறிவுத் தொழில்நுட்பம் மூலமாகவோ இவற்றை ஹேக் செய்ய வாய்ப்புள்ளது. சிறிய அளவில் இருந்தாலும் கூட அது மிகப் பெரிய ஆபத்துதான் என்று கூறியுள்ளார் மஸ்க்.


ராகுல் காந்தியின் பதில்




இந்த கருத்து சமூக வலைதளங்களில் மிகப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில். காரணம், இங்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு எதிராக நீண்ட காலமாக கருத்துக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக இதை எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில் மஸ்க்கின் கருத்து இந்தியாவில் அதிக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தியும் இதில் இணைந்துள்ளார். அவர் மகாராஷ்டிராவில் நடந்த ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டி மஸ்க்குக்கு பதிலளித்துள்ளார். அதில், இந்தியாவைப் பொறுத்தவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கருப்பு பெட்டி போல. யாரும் அதை பரிசோதிக்க அனுமதியே கிடையாது.  நமது தேர்தல் முறைகளின் வெளிப்படைத் தன்மை குறித்து மிகத் தீவிரமான கவலைகள் எழுந்து வருகின்றன. தேர்தல் ஆணையம் மீதான நம்பகத்தன்மை குலையும்போது ஜனநாயகம் கேலிக்கூத்தாக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் ராகுல் காந்தி.


ராஜீவ் சந்திரசேகரின் விளக்கம்




ஆனால் எலான் மஸ்க்கின் கருத்துக்கு பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவருமான ராஜீவ் சந்திரசேகர் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.


இதுதொடர்பாக ராஜீவ் சந்திரசேகர் போட்டுள்ள டிவீட்டில்,  உங்களுடையது பொதுப்படையான குற்றச்சாட்டு. இது தவறானது.  எலான் மஸ்க்கின் கருத்து அமெரிக்கா போன்ற நாடுகளுக்குத்தான் பொருந்தும். காரணம் அங்கு எல்லா கம்ப்யூட்டர் தொடர்பான கட்டமைப்புகளும் இன்டர்நெட்டுடன் இணைந்துள்ளன.  குறிப்பாக வாக்குப் பதிவு இயந்திரங்கள். 


ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எந்தவகையான  கட்டமைப்புடனும் இணைக்கப்படுவதில்லை - அதாவது இன்டர்நெட், ப்ளூடூத், வைபை என எந்த தகவல் தொடர்புடனும் இணைக்கப்படுவதில்லை. எந்த கன்ட்ரோலிங் முறையாலும் இவற்றின் புரோகிராமையும் மாற்ற முடியாது. இந்தியாவில் இவை மிகச் சரியாகவே உள்ளன. எலான் மஸ்க்குக்கு இதுதொடர்பாக விளக்கம் அளிக்க நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ராஜீவ் சந்திரசேகர்.

சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்