சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் அதற்கு பிறகு அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை படிப்படியாக உயரும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் கொடூர தாக்கம் எப்போது தான் குறையும், கொஞ்சம் மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு குட் நியூசாக, அடுத்த 6 நாட்களுக்கு தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறி இருந்தது. இதனால் மக்கள் சந்தோஷப்பட்டனர். வானிலை மையம் சொன்னது போலவே நேற்று பிற்பகல் முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மழையும் பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பநிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. அதற்கு பிறகு 3 நாட்களுக்கு வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஓரளவிற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மன்னார் வளைகுடா, தென் தமிழகத்தின் கடலோர பகுதிகள், தெற்கு கேரளாவின் கடலோர பகுதிகளில் கடல் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு
1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்
அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!
சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3
தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!
பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!
என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...
பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!
{{comments.comment}}