திருவள்ளூர் அருகே..870 ஏக்கரில் உருவாகிறது.. புதிய அறிவுசார் நகரம்..!

Jun 02, 2025,10:31 AM IST

சென்னை: 870 ஏக்கரில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை அருகே அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில், பல்வேறு உயர்கல்வி திட்டங்களை தமிழக அரசு மேம்படுத்தி வருகிறது. இதற்காக ஏழை,எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளயும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் உயர் கல்வியில் சேர்ந்து மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.மேலும்  கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.


அதில் ஒரு பகுதியாக மத்திய, மாநில துறை சார்ந்த உயர் பதவிகளுக்குப் போட்டி தேர்வு கட்டாயமாக உள்ள நிலையில், பல்வேறு மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், நகர்ப்புறங்களில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அறிவுசார் மையம் மற்றும் நூலகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.




அதன்படி, சென்னை, திருச்சி, கோவை, மதுரை, அரியலூர், உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கணினி வசதி, போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான படிப்பகங்கள், ஏசி வசதி, குழந்தைகளுக்கான அரங்கு என பல்வேறு அம்சங்கள் நிறைந்த நூலகங்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 


அதேபோல் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்வி தொடர்பான புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் இடம்பெற்ற நவீன மயமான நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையங்கள்  செயல்பட்டு வருகின்றன.


அந்த வகையில் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 870 ஏக்கரில் புதிய அறிவுசார் நகரம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 413.25 ஏக்கரில் அறிவுசார் நகரத்துக்கான உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள டிட்கோ நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், மூன்று கட்டங்களாக நடைபெற உள்ள இந்த அறிவுசார் நகரத்தில், கல்லூரி குடியிருப்பு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகங்கள், மாணவர் குடியிருப்பு ஆகியவை அமைக்கப்பட உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது - அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல்

news

மத்திய பட்ஜெட் 2026: ஞாயிற்றுக்கிழமையில் ஏற்றம் காணும் பங்குச் சந்தைகள்

news

மத்திய பட்ஜெட்: ஏன் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது?

news

ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?

news

புடவையில் அடையாளம் சொல்லும் நிர்மலா சீதாராமன்...இந்த முறை தமிழ்நாடு காஞ்சிபுரம் பட்டு

news

வேலின் அருளால் தைப்பூசத்தில் ஏற்படும் பலன்கள்!

news

சமாதானம்

news

உள்ளமெல்லாம் நீயாய்.. உயிர் நிறையும் முருகா!

news

நேர்மைக்கு மறு பெயர் பத்மா.. சொக்கத் தங்கத்தின் மறு உருவம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்