"நான்தான் திருமணம் செய்து வைத்தேன்".. மாரிமுத்து மறைவுக்கு வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

Sep 08, 2023,05:17 PM IST
சென்னை:  தேனியில் நான்தான் திருமணம் செய்துவைத்தேன் இன்று அவன்மீது  இறுதிப் பூக்கள் விழுவது கண்டு இதயம் உடைகிறேன்  என்று நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் மாரிமுத்து, கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றி தனது வாழ்க்கையை  துவக்கியவர். பிறகு படிப்படியாக உயர்ந்து நடிகர், இயக்குனர் என வளர்ந்தவர்.  தற்போது சினிமாக்களிலும், சின்னத்திரை சீரியல்கள் சிலவற்றிலும் நடித்து வந்தார். இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த போது மாரிமுத்துவிற்கு திடீரென பயங்கர நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பால் மாரிமுத்து உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.



மாரிமுத்துவின் இந்த திடீர் மரணத்திற்கு சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.  கவிஞர் வைரமுத்துவின் பிரியத்துக்குரியவர் மாரிமுத்து. அவரிடம்தான் முதல் முறையாக மாரிமுத்து உதவியாளராகச் சேர்ந்தார். அவரது அன்பைப் பெற்றவர். வைரமுத்துவிடமிருந்துதான் மாரிமுத்துவின் திரையுலகப் பயணம் தொடங்கியது.

மாரிமுத்து மறைவு தொடர்பாக வைரமுத்து விடுத்துள்ள கவிதை அஞ்சலி:

தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன் 

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன் என்று கூறியுள்ளார் வைரமுத்து.

"தம்பி மாரிமுத்துவின்
மரணச் செய்தி கேட்டு
என் உடம்பு ஒருகணம்
ஆடி அடங்கியது

சிகரத்தை நோக்கிச்
சென்றுகொண்டிருந்தவனை
மரணத்தின் பள்ளத்தாக்கு
விழுங்கிவிட்டது

என் கவிதைகளின்
உயிருள்ள ஒலிப்பேழை அவன்

என் உதவியாளராய் இருந்து
நான் சொல்லச் சொல்ல எழுதியவன்

தேனியில் நான்தான்
திருமணம் செய்துவைத்தேன்
இன்று அவன்மீது
இறுதிப் பூக்கள் விழுவதுகண்டு
இதயம் உடைகிறேன் 

குடும்பத்துக்கும்
கலை அன்பர்களுக்கும்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டே
ஆறுதல் சொல்கிறேன்"

இவ்வாறு வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்