மாணவிகளிடையே ஆபாசமாக பேசிய மகாவிஷ்ணுவைக் கைது செய்ய வேண்டும்.. மாணவர்கள் போராட்டம்

Sep 06, 2024,11:28 AM IST

சென்னை: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை குறித்து சர்ச்சை உரை நிகழ்த்திய மகாவிஷ்ணு என்பவருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்த நபர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கல்வி சார்ந்த சொற்பொழிவு ஆற்ற பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. 




ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு என்சிசி மாணவியரின் அணிவகுப்பு மரியாதையெல்லாம் கொடுத்து தடபுடலாக கூட்டிப் போயுள்ளனர். அங்கு பேசிய இவர், முன்பிறவி பாவ புண்ணியம், மறு ஜென்மம் என மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலாகி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இவர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இன்று அசோக் நகர் பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின்  சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், தியானத்தின் மூலம் மாணவிகள் தங்களது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். தியானம் மூலம் இதைச் செய்ய முடியும். யாராவது நம் முன்பு வந்து நிர்வாணமாக நின்றால் கூட உங்களால் உங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். நானே கூட அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோபாவேசமாகக் கூறினர்.


இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது தொடர்பாக   அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்விக்கு தொடர்பில்லாத எந்த  நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

DMK Introspection: தேர்தலில் தோற்றது ஏன்? .. திமுக கள ஆய்வு ரிப்போர்ட் தந்த அதிர்ச்சி தகவல்

news

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில்.. கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்!

news

தகுதி நீக்கமா? ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்!

news

ஸ்டிக்கர் ஒட்டிய சோஃபா மாடல் அரசு - முதல்வர் விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

news

தமிழ்நாடு எம்எல்ஏக்களுக்கு 2 நாள் பயிற்சி வகுப்பு: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

news

ஆளே இல்லாத கடையில டீ ஆத்துவது போல...தமிழக அரசை விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்

news

பைக் டாக்ஸி: தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? உயர்நீதிமன்ற கிளை கேள்வி!

news

அரசியலுக்கு வரவா? வேண்டாமா?.. நீங்களே சொல்லுங்க பார்ப்போம்.. மக்களிடம் கேட்கும் ராகவா லாரன்ஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்