சென்னை: அரசு பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மூடநம்பிக்கை குறித்து சர்ச்சை உரை நிகழ்த்திய மகாவிஷ்ணு என்பவருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. அந்த நபர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாட்களுக்கு முன்னதாக ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் கல்வி சார்ந்த சொற்பொழிவு ஆற்ற பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு என்பவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு என்சிசி மாணவியரின் அணிவகுப்பு மரியாதையெல்லாம் கொடுத்து தடபுடலாக கூட்டிப் போயுள்ளனர். அங்கு பேசிய இவர், முன்பிறவி பாவ புண்ணியம், மறு ஜென்மம் என மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலாகி பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவர் மாணவிகளிடையே ஆபாசமாக பேசியதாக கூறி இன்று அசோக் நகர் பள்ளி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறுகையில், தியானத்தின் மூலம் மாணவிகள் தங்களது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். தியானம் மூலம் இதைச் செய்ய முடியும். யாராவது நம் முன்பு வந்து நிர்வாணமாக நின்றால் கூட உங்களால் உங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். நானே கூட அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் ஆபாசமாக பேசியுள்ளார். அவர் மீது பாலியல் வன்கொடுமைச் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கோபாவேசமாகக் கூறினர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இதுதொடர்பாக தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தியது தொடர்பாக அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்விக்கு தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}