மமதா பானர்ஜியின் 3வது அணி முயற்சி பலிக்குமா?.. நவீன் பட்நாயக்குடன் சந்திப்பு

Mar 24, 2023,10:31 AM IST
புவனேஸ்வர்:  காங்கிரஸ் அல்லாத 3வது அணிக்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி. இதன் ஒரு பகுதியாக ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கை அவர் நேற்று சந்தித்துப் பேசினார்.

லோக்சபா தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகின்றன. வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் கட்சிகள் இறங்கியுள்ளன. பாஜக தனது திட்டத்தை மெல்ல வெல்ல அவிழ்த்து வருகிறது. மறுபக்கம் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. தனது தலைமையில் அமையாவிட்டாலும் பரவாயில்லை. யார்தலைமை தாங்கினாலும் பிரச்சினை இல்லை. வலுவான எதிர்க்கட்சி கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கூறி விட்டது.



ஆனால் மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் ஆகியோர் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் இடம் பெறும் அணியில் சேர ஆர்வம் காட்டவில்லை. தனி அணி அமைக்கும் முயற்சியில் ஆர்வமாக உள்ளனர். 

சமீபத்தில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ், கொல்கத்தாவில், மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசினார். அப்போது தாங்கள் லோக்சபா தேர்தலில் இணைந்து செயல்பட தீர்மானித்திருப்பதாக மமதா கூறினார். இதுதொடர்பாக ஒடிஷா முதல்வரும், பிஜூ ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக்கை சந்திக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

அதன்படி நவீன் பட்நாயக்கை நேற்று மமதா பானர்ஜி புவனேஸ்வரில் சந்தித்துப் பேசினார்.  ஆனால் இந்த சந்திப்பு குறித்து பின்னர் மமதா பானர்ஜி கூறுகையில், இது மரியாதை நிமித்தமதான சந்திப்பு. நாங்கள் அரசியல் பேசவில்லை .. நாட்டின் ஜனநாயக அமைப்பை வலுவுள்ளதாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தோம். இதைத் தவிர வேறு எந்த அரசியல் குறித்தும் பேசவில்லை என்று கூறினார் மமதா பானர்ஜி.

இதற்கிடையே, மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் எச்.டி. குமாரசாமி, இன்று கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை சந்தித்துப் பேசவுள்ளார். அதேபோல இந்த மாத இறுதியில் டெல்லி செல்லும் மமதா பானர்ஜி, அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

இப்படி ஆளாளுக்கு கூட்டணி அமைக்க கிளம்பி வருவதால��� ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிக் கூட்டணி அமையும் வாய்ப்பு மங்கி வருகிறது. இது பாஜகவுக்கே பலனைத் தரும் என்பதால் பாஜக தரப்பு ஹேப்பியாக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்