சைவத்தில் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிவ பெருமான் மீது எத்தனையோ பாடல்கள் பாடி உள்ளார். அவை அனைத்தையும் விட உயர்வானதாக போற்றப்படுவது திருவெம்பாவை என்னும் 20 பாடல்களின் தொகுப்பு தான்.
மார்கழி மாதத்தில் அனைவரும் இறைவனை வேண்டி, அவனின் அருளைப் பெற்று, அனைத்து நலன்களை பெற வேண்டும் என்பதற்காகவும், உலக உயிர்களை அஞ்ஞானத்தில் இருந்து எழுப்புவதற்காக மாணிக்கவாசகர் இந்த பாடல்களை இயற்றி உள்ளார்.
திருவெம்பாவை பாசுரம் 04 :

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
பொருள் :
ஒளி சிந்தும் புன்னகையை உடைய பெண்ணே, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? என வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்து கேட்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு பதிலளிக்கும் வீட்டிற்குள் இருக்கும் பெண், என்னை இன்னும் எழவில்லையா என கேட்கிறாயே, கிளிகளை போல் இனிமையாக பேசும் மற்றவர்கள் அனைவரும் வந்து விட்டார்களா? என பதில் கேள்வி கேட்கிறாள். அதற்கு சற்று கோபமாக பதிலளிக்கும் வெளியில் காத்திருக்கும் தோழி, எத்தனை பேர் வந்துள்ளார்கள் என எங்களை எண்ணச் சொல்லி விட்டு நீ தூங்கி காலத்தை போக்காதே. விண்ணவர்களுக்கு அரிய மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும், காண கிடைக்காத பேரழகுடனும் திகழும் நம் தலைவன் சிவ பெருமானை பாடி, பக்தி செய்ய வேண்டும். உனக்கு வேண்டுமானால் நீரே வந்து எண்ணி பார்த்துக் கொள். நீ என்னும் போது ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கு பிறகு நீ மீண்டும் போய் தூங்கிக் கொள்.
விளக்கம் :
உலகத்தில் உள்ள மக்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் இறைவனை எண்ணுவதற்கும் தவறி விடுகிறார்கள். தங்களின் தவறை விடுத்து, அவர்கள் பக்தி செய்யவில்லையே என மற்றவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லி தாங்கள் விலகி செல்ல பார்க்கிறார்கள். ஆனால் இறைவனின் கருணை மிகப் பெரியது. அரிதான இந்த பிறவியை வீணடிக்காமல் இறைவனின் நாமத்தை கூறி, பக்தி செய்து, இறைவனின் திருவடிகளை சென்று சேர வேண்டும் என உலகத்தவர்களுக்கு உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.
தீயாய் பரவும் வதந்தி.. பெட்ரோல் பங்குகளில் குவிந்த மக்கள்.. பீதி தேவையில்லை என அரசு விளக்கம்
பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்? - தமிழக அரசிற்கு விஜய் சரமாரி கேள்வி
யோசனை, சிந்தனை, ஒருமுகப்படுத்துதல் (செறிவு) & தியானம்
3 உதயசூரியன்.. ஒரு தனிச் சின்னம்.. ஆக மொத்தம் மதிமுகவுக்கு 4 சீட்.. 2 தொகுதிகள் குறைவு!
ஐபிஎல் 2026: முதல் கட்ட அட்டவணை வெளியீடு.. பெங்களூருவில் தொடக்க ஆட்டம்.. சென்னைக்கு எப்போ?
துபாய் விமான நிலையம் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் உட்பட 4 பேர் காயம்
தேமுதிக.,விற்கு விருத்தாச்சலம் தொகுதி ஒதுக்கீடு?: மீண்டும் ஒரு 'கேப்டன்' மேஜிக் நடக்குமா?
ஒரே நாளில் 60 வேட்பாளர்கள் தேர்வு...அதிரடி காட்டும் தவெக விஜய்
தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் நாளை பதவியேற்பு
{{comments.comment}}