சைவத்தில் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் சிவ பெருமான் மீது எத்தனையோ பாடல்கள் பாடி உள்ளார். அவை அனைத்தையும் விட உயர்வானதாக போற்றப்படுவது திருவெம்பாவை என்னும் 20 பாடல்களின் தொகுப்பு தான்.
மார்கழி மாதத்தில் அனைவரும் இறைவனை வேண்டி, அவனின் அருளைப் பெற்று, அனைத்து நலன்களை பெற வேண்டும் என்பதற்காகவும், உலக உயிர்களை அஞ்ஞானத்தில் இருந்து எழுப்புவதற்காக மாணிக்கவாசகர் இந்த பாடல்களை இயற்றி உள்ளார்.
திருவெம்பாவை பாசுரம் 04 :

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.
பொருள் :
ஒளி சிந்தும் புன்னகையை உடைய பெண்ணே, இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? என வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை பார்த்து கேட்கிறாள் தோழி ஒருத்தி. அதற்கு பதிலளிக்கும் வீட்டிற்குள் இருக்கும் பெண், என்னை இன்னும் எழவில்லையா என கேட்கிறாயே, கிளிகளை போல் இனிமையாக பேசும் மற்றவர்கள் அனைவரும் வந்து விட்டார்களா? என பதில் கேள்வி கேட்கிறாள். அதற்கு சற்று கோபமாக பதிலளிக்கும் வெளியில் காத்திருக்கும் தோழி, எத்தனை பேர் வந்துள்ளார்கள் என எங்களை எண்ணச் சொல்லி விட்டு நீ தூங்கி காலத்தை போக்காதே. விண்ணவர்களுக்கு அரிய மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும், காண கிடைக்காத பேரழகுடனும் திகழும் நம் தலைவன் சிவ பெருமானை பாடி, பக்தி செய்ய வேண்டும். உனக்கு வேண்டுமானால் நீரே வந்து எண்ணி பார்த்துக் கொள். நீ என்னும் போது ஆட்கள் குறைவாக இருந்தால் அதற்கு பிறகு நீ மீண்டும் போய் தூங்கிக் கொள்.
விளக்கம் :
உலகத்தில் உள்ள மக்கள் ஏதேதோ காரணங்களை சொல்லி அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறார்கள். இதனால் இறைவனை எண்ணுவதற்கும் தவறி விடுகிறார்கள். தங்களின் தவறை விடுத்து, அவர்கள் பக்தி செய்யவில்லையே என மற்றவர்களுடன் ஒப்பிட்டுச் சொல்லி தாங்கள் விலகி செல்ல பார்க்கிறார்கள். ஆனால் இறைவனின் கருணை மிகப் பெரியது. அரிதான இந்த பிறவியை வீணடிக்காமல் இறைவனின் நாமத்தை கூறி, பக்தி செய்து, இறைவனின் திருவடிகளை சென்று சேர வேண்டும் என உலகத்தவர்களுக்கு உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}