- ஹைதராபாத் தனலட்சுமி
எல்லோருக்குமே காலைல எழுவது போல ஒரு கஷ்டம் இருக்காதுங்க.. அதுவும் திங்கள்கிழமை காலை எழுவதுதான் இருப்பதிலேயே பெரும் சோதனை.
ஆமாங்க.. இந்த காலை நேர கஷ்டத்தைப் பத்தித்தான் இப்போ பேசப் போறோம்.. முதல்ல அனைவருக்கும் காலை வணக்கம்.. காலைல எழுந்தவுடன் அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு; "காப்பிய போடுற காலம் போய்.. இப்போ செல்போனை கையில எடுத்து; எப்படி காப்பி போடறது?? அப்படின்னு பாக்குற பிரண்ட்ஸ் தாங்க அதிகமா இருக்கிறாங்க.
அவங்களைச் சொல்லி குத்தமில்லீங்க.. காலம் அப்படி மாறிப் போய் விட்டது.. இவங்களுக்கெல்லாம் இன்னைக்கு என்ன மெசேஜ் சொல்ல போறேன்னா .. ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்றது ஒன்னே ஒன்னுதாங்க.. நாம தெளிவா இருக்குற வரைக்கும் நம்மளை யாராலும் வீழ்த்த முடியாதுங்க.. அதை மட்டும் நல்ல மனசுல தெளிவா வச்சுக்கோங்க.

நிறையப் பேரிடம் இருப்பது சோம்பேறித்தனம்தான். அதுதான் காலையில் எழுவதற்கு நமக்கு கஷ்டத்தைக் கொடுக்குது. அதுக்குத்தான் நிறைய விஷயங்களை பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி செய்து விட்டு, குளித்து விட்டு வேலையில் இறங்கிப் பாருங்க.. அன்னிக்கு நாள் முழுக்க பிரஷ்ஷா இருக்குமாம். அதை செஞ்சு பார்த்தவங்க சொல்றாங்க.. செய்யாம இருப்பவங்க செய்ய ஆரம்பிங்க.. என்ன மாதிரி சேஞ்ச் வருதுன்னு பார்க்கலாம்.
அடுத்ததா.. வாழ்க்கையில் எல்லா விஷயத்துக்குமே மோர் தேன் ஒரு சான்ஸ் இருக்கும்ங்க.. சான்ஸ் இருக்கும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்! எதுக்குங்க பயந்துகிட்டு?? பயப்படாதீங்க.. துணிந்து இறங்கலாம் வாங்க... நம்மளால நேத்து செஞ்ச தப்பை டைம் லைன் மெஷின் போய் சரி செய்ய முடியாதுங்க ஆனா ஃபியூச்சர் அதாங்க (நாளை ) அதை மறுபடியும் பண்ணாம பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை..
கோவப்படுறது என்னமோ ஒரு நிமிஷம் தாங்க. ஆனா அதோட கஷ்டத்தையும் அதோட வலிகளை அனுபவிக்கிறது நம்மளால காலத்துக்கும் மறக்க முடியாது. சரிதானே பிரண்ட்ஸ்..??. ஏமாந்து போறது யாருக்குமே புதுசு இல்லைங்க.. அது பழகிரும்.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.. ஆனால் தொடர்ந்து ஏமாறம இருக்கணும். அதுதான் முக்கியம்.
சிலரது முகமூடி கீழ விழற வரைக்கும் அது கூட நம்ம அவங்களுடைய இயல்பு தானே என்று நம்பிகிட்டு இருக்கிறோம்.. அதையும் புரிந்து கொள்ளும்போது நாம சரியாகிடுவோம்..
ஓகே.. டீ சாப்பிட டைம் ஆயிடுச்சு.. மீண்டும் ஒரு நல்ல மார்னிங் மெசேஜ்ல மறுபடியும் சந்திப்போம்.. பை!
கோனோ கார்பஸ் மரத்துக்கு தடாலடியாக தடை விதித்த தமிழ்நாடு அரசு.. காரணம் இதுதான்!
மறக்கக் கூடாத நம்மாழ்வார்.. இயற்கை வேளாண்மையைப் பாதுகாக்க உறுதி எடுப்போம்!
ச்சும்மா.. சோம்பேறித்தனம்!
"பந்தயம் என்பது நடிப்பு அல்ல": அஜித் குமாரின் கார் பந்தய ஆவணப்படம் வெளியீடு
புதிய வாக்காளர்களுக்கு புது டிசைனில் அடையாள அட்டைகள்: தேர்தல் ஆணையம் தகவல்
vaikunta Ekadashi 2025 கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு
Bangladesh in Tears: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 30, 2025... இன்று மோட்சம் தரும் வைகுண்ட ஏகாதசி
பெரியார் வழியில் ராகுல்.. சில காங். தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ். வழியில்.. ஆளூர் ஷாநவாஸ்
{{comments.comment}}