- ஹைதராபாத் தனலட்சுமி
எல்லோருக்குமே காலைல எழுவது போல ஒரு கஷ்டம் இருக்காதுங்க.. அதுவும் திங்கள்கிழமை காலை எழுவதுதான் இருப்பதிலேயே பெரும் சோதனை.
ஆமாங்க.. இந்த காலை நேர கஷ்டத்தைப் பத்தித்தான் இப்போ பேசப் போறோம்.. முதல்ல அனைவருக்கும் காலை வணக்கம்.. காலைல எழுந்தவுடன் அலாரத்தை ஆஃப் பண்ணிட்டு; "காப்பிய போடுற காலம் போய்.. இப்போ செல்போனை கையில எடுத்து; எப்படி காப்பி போடறது?? அப்படின்னு பாக்குற பிரண்ட்ஸ் தாங்க அதிகமா இருக்கிறாங்க.
அவங்களைச் சொல்லி குத்தமில்லீங்க.. காலம் அப்படி மாறிப் போய் விட்டது.. இவங்களுக்கெல்லாம் இன்னைக்கு என்ன மெசேஜ் சொல்ல போறேன்னா .. ஷார்ட் அன்ட் ஸ்வீட்டா சொல்றது ஒன்னே ஒன்னுதாங்க.. நாம தெளிவா இருக்குற வரைக்கும் நம்மளை யாராலும் வீழ்த்த முடியாதுங்க.. அதை மட்டும் நல்ல மனசுல தெளிவா வச்சுக்கோங்க.
நிறையப் பேரிடம் இருப்பது சோம்பேறித்தனம்தான். அதுதான் காலையில் எழுவதற்கு நமக்கு கஷ்டத்தைக் கொடுக்குது. அதுக்குத்தான் நிறைய விஷயங்களை பெரியவங்க சொல்லி வச்சிருக்காங்க. அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சி செய்து விட்டு, குளித்து விட்டு வேலையில் இறங்கிப் பாருங்க.. அன்னிக்கு நாள் முழுக்க பிரஷ்ஷா இருக்குமாம். அதை செஞ்சு பார்த்தவங்க சொல்றாங்க.. செய்யாம இருப்பவங்க செய்ய ஆரம்பிங்க.. என்ன மாதிரி சேஞ்ச் வருதுன்னு பார்க்கலாம்.
அடுத்ததா.. வாழ்க்கையில் எல்லா விஷயத்துக்குமே மோர் தேன் ஒரு சான்ஸ் இருக்கும்ங்க.. சான்ஸ் இருக்கும்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்! எதுக்குங்க பயந்துகிட்டு?? பயப்படாதீங்க.. துணிந்து இறங்கலாம் வாங்க... நம்மளால நேத்து செஞ்ச தப்பை டைம் லைன் மெஷின் போய் சரி செய்ய முடியாதுங்க ஆனா ஃபியூச்சர் அதாங்க (நாளை ) அதை மறுபடியும் பண்ணாம பாத்துக்க வேண்டியது நம்மளோட கடமை..
கோவப்படுறது என்னமோ ஒரு நிமிஷம் தாங்க. ஆனா அதோட கஷ்டத்தையும் அதோட வலிகளை அனுபவிக்கிறது நம்மளால காலத்துக்கும் மறக்க முடியாது. சரிதானே பிரண்ட்ஸ்..??. ஏமாந்து போறது யாருக்குமே புதுசு இல்லைங்க.. அது பழகிரும்.. அதுல எந்த மாற்றமும் கிடையாது.. ஆனால் தொடர்ந்து ஏமாறம இருக்கணும். அதுதான் முக்கியம்.
சிலரது முகமூடி கீழ விழற வரைக்கும் அது கூட நம்ம அவங்களுடைய இயல்பு தானே என்று நம்பிகிட்டு இருக்கிறோம்.. அதையும் புரிந்து கொள்ளும்போது நாம சரியாகிடுவோம்..
ஓகே.. டீ சாப்பிட டைம் ஆயிடுச்சு.. மீண்டும் ஒரு நல்ல மார்னிங் மெசேஜ்ல மறுபடியும் சந்திப்போம்.. பை!
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}