ஆண் பூ

Jul 18, 2026,02:45 PM IST

- கொடைக்கானல் ப.வினு


​பூவுக்குள் ஒரு காதல் தூதன்  

நீ

புல்லாங்குழல் ஊதாத ஒரு மாயக்கண்ணன்!


​வண்ண இதழ்கள் உனக்கும் உண்டு

ஆனால் சுமப்பதற்குத் தான் கர்ப்பப்பை இல்லை!


தன் காதலியின் கூந்தலில் அமர முடியாத

துரதிர்ஷ்டவசமான தேவதூதன் நீ!


​பெண் பூவுக்கு

தாய்மை என்னும் மகுடம் தந்துவிட்டு

மகரந்தத்தை மட்டும் தூதனுப்பி

மண்ணில் உதிரும் வள்ளலடா நீ!




​காய்க்கத் தெரியாத பூ என்று

உன்னை உலகம் கேலி செய்யலாம்...

ஆனால்,

உன் ஒற்றை முத்தத்தின் எச்சத்தில்தானே

உயிர்க்கிறது அடுத்த தலைமுறை!


​நீ

காயாக மாறாமல் காய்ந்து போகலாம்,

கனியாக மாறாமல் கரைந்து போகலாம்!

ஆனால்,

படைப்பின் முதல் கவிதை நீதான்!


​தன்னை அழித்து

காதலியை வாழவைக்கும்

சுயநலமில்லாத ஆண் பூவே...


நீயும்

இயற்கை எழுதிச் சுருட்டி வீசிய

ஒரு காதல் கடிதம் தான்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்