பைக் வீலிங் செய்து விபத்து.. படுகாயமடைந்த டிடிஎப் வாசன் கைது.. நடந்தது என்ன?

Sep 19, 2023,11:17 AM IST

காஞ்சிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை அதி வேகமாக ஓட்டி அபாயகரமான முறையில் வீலிங் செய்து படுகாயமடைந்த டிடிஎப் வாசன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் படு வேகமாக பைக் ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசன் வீடியோ பதிவு செய்து கொண்டே, வீலிங் சாகசத்தில் ஈடுபட்டதால் பைக் நிலை தடுமாறி பறந்து சென்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதி நவீன ஹெல்மட், பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்ததால் டிடிஎப் வாசன்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 


நல்ல வேளையாக அவர் பைக் மோதி விழுந்த இடத்தில் யாரும் இல்லை. யாரேனும் இருந்திருந்தால் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள். அந்த அளவுக்கு வேகமாக வந்து மோதி விழுந்தது அவர் ஓட்டி வந்த பைக். சாலையில் சென்றோர் வாசனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் இவருக்கு உடலில் சிறு சிறு காயங்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.


வாசனின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலரும் வாசனைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அழுத்தம் அதிகரித்ததால் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




யார் இந்த டிடிஎப் வாசன்:

டிடிஎப் வாசன் என்பவர் பிரபல யூட்யூபர். இவர் Twin Throttlers என்ற youtube பக்கத்தை நடத்தி வருகிறார்.  கடந்த இரண்டு வருடங்களாக ட்ராவல் விலாக் என்ற பக்கத்தையும் உருவாக்கி உள்ளார். இவருக்கு இருபத்தி லட்சத்திற்கும் அதிகமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர்.

டிடிஎப் வாசன் பைக்கில் சாகசம் செய்வது பற்றிய வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில் லடாக் சென்று அங்கு பைக்கை வேகமாக ஓட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டு இருந்தார். டூ கே கிட்ஸ் என சொல்லக்கூடிய பைக் மீது ஆர்வமாக உள்ள பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதிக வேகத்தில் பயணம் ,வீலிங் செய்வது, போன்ற சாலை விதிகளை மீறிய வழக்குகளில் காவல்துறையினரால் பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வீடியோ எடுத்துக் கொண்டே பைக் வீலிங் செய்ததால் வாகனம் நிலைதடுமாறி விபத்திற்கு உள்ளானது .இதனால் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற நபர்கள் சட்டத்தை மீறுவதுடன் மட்டும் இல்லாமல் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கின்றனர் . இவர் தான் பெரிய ஆள் என தன்னை சித்தரித்தும், இளைஞர்களின் மனதை கெடுத்தும் வருகின்றனர் என பல வழிகளில் புகார்கள் எழுந்து வருகின்றன. நாங்கள் இது போன்றவர்களை விடமாட்டோம் உரிய நடவடிக்கை  எடுப்போம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

கீரையின் அரசன் முருங்கைக் கீரையும்.. தட்டைப் பயறும் கை கோர்த்தால்.. செம ரெசிபி!

news

திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்: நயினார் நாகேந்திரன்

news

தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை திடீர் உயர்வு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அழுது கொண்டே இருந்த குழந்தை.. கோபத்தில் 2வது மாடியிலிருந்து.. தாய் செய்த பகீர் செயல்!

news

5வது நாளாக தொடரும் போராட்டங்கள்.. தத்தளிக்கும் லாஸ் ஏஞ்சலெஸ்.. இரவு நேர ஊரடங்கு அமல்!

news

பெண்ணாதிக்கம்!

news

வாடி என் வயிற்றுக்குள்ளே.!! (சிறுகதை)

news

என்னை இப்படி தேவையில்லாமல் புகழாதீர்கள்.. செனாப் பாலம் புகழ் மாதவி லதா வேண்டுகோள்!

news

தமிழகத்தில் எந்தந்த மாவடங்களுக்கு ரெட் அலர்ட்... ஆரஞ்சு அலர்ட் தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்