பைக் வீலிங் செய்து விபத்து.. படுகாயமடைந்த டிடிஎப் வாசன் கைது.. நடந்தது என்ன?

Sep 19, 2023,11:17 AM IST

காஞ்சிபுரம்: தேசிய நெடுஞ்சாலையில் பைக்கை அதி வேகமாக ஓட்டி அபாயகரமான முறையில் வீலிங் செய்து படுகாயமடைந்த டிடிஎப் வாசன் இன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.


சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் படு வேகமாக பைக் ஓட்டிச் சென்ற டிடிஎப் வாசன் வீடியோ பதிவு செய்து கொண்டே, வீலிங் சாகசத்தில் ஈடுபட்டதால் பைக் நிலை தடுமாறி பறந்து சென்று விழுந்து விபத்திற்கு உள்ளானது. அதி நவீன ஹெல்மட், பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருந்ததால் டிடிஎப் வாசன்  சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 


நல்ல வேளையாக அவர் பைக் மோதி விழுந்த இடத்தில் யாரும் இல்லை. யாரேனும் இருந்திருந்தால் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள். அந்த அளவுக்கு வேகமாக வந்து மோதி விழுந்தது அவர் ஓட்டி வந்த பைக். சாலையில் சென்றோர் வாசனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் இவருக்கு உடலில் சிறு சிறு காயங்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.


வாசனின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. சமூக வலைதளங்களில் பலரும் வாசனைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அழுத்தம் அதிகரித்ததால் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.




யார் இந்த டிடிஎப் வாசன்:

டிடிஎப் வாசன் என்பவர் பிரபல யூட்யூபர். இவர் Twin Throttlers என்ற youtube பக்கத்தை நடத்தி வருகிறார்.  கடந்த இரண்டு வருடங்களாக ட்ராவல் விலாக் என்ற பக்கத்தையும் உருவாக்கி உள்ளார். இவருக்கு இருபத்தி லட்சத்திற்கும் அதிகமான ஃபேன் பாலோவர்ஸ் உள்ளனர்.

டிடிஎப் வாசன் பைக்கில் சாகசம் செய்வது பற்றிய வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வந்துள்ளார். சமீபத்தில் லடாக் சென்று அங்கு பைக்கை வேகமாக ஓட்டுவது போன்ற வீடியோவை பதிவிட்டு இருந்தார். டூ கே கிட்ஸ் என சொல்லக்கூடிய பைக் மீது ஆர்வமாக உள்ள பலர் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். அதிக வேகத்தில் பயணம் ,வீலிங் செய்வது, போன்ற சாலை விதிகளை மீறிய வழக்குகளில் காவல்துறையினரால் பலமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வீடியோ எடுத்துக் கொண்டே பைக் வீலிங் செய்ததால் வாகனம் நிலைதடுமாறி விபத்திற்கு உள்ளானது .இதனால் காவல்துறையினர் டிடிஎஃப் வாசன் மீது மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற நபர்கள் சட்டத்தை மீறுவதுடன் மட்டும் இல்லாமல் இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கின்றனர் . இவர் தான் பெரிய ஆள் என தன்னை சித்தரித்தும், இளைஞர்களின் மனதை கெடுத்தும் வருகின்றனர் என பல வழிகளில் புகார்கள் எழுந்து வருகின்றன. நாங்கள் இது போன்றவர்களை விடமாட்டோம் உரிய நடவடிக்கை  எடுப்போம் எனவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

பேளூர் தான் தோன்றீஸ்வரர் கோவில் திருக்குடமுழக்கு விழா

news

நீங்க ஏன் எப்போதும் தனியா இருக்கிறீங்க?.. (மனிதம் மலர்கையில் - 7)

news

UPI PIN மறந்து போச்சா? கவலை வேண்டாம்...ஈஸியா பணம் அனுப்ப வழி இருக்கு

news

ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி...கேன்சல் டிக்கெட்டிற்கு இனி ரீஃபண்ட் கிடையாதாம்

news

ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டு செல்வோருக்கு முக்கிய அறிவுறுத்தல்

news

தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியில்லை...வேல்முருகன் அதிரடி அறிவிப்பு

news

பாஜகவின் தொகுதி பங்கீட்டு உத்தேச பட்டியல் இதுதானா.. நாளை வருகிறார் பி.எல். சந்தோஷ்!

news

ADMK candidates: 23 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடியில் மீண்டும் பழனிச்சாமி போட்டி!

news

தங்கமே உன்னை ரசிக்கிறேன்.. ஆனாலும் கொஞ்சம் வெறுக்கிறேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்