பட்ஜெட் உரையை புறக்கணித்தது ஏன்? - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

Mar 14, 2025,05:25 PM IST

சென்னை : தமிழக பட்ஜெட் உரையை புறக்கணித்து, அதிமுக சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது. தங்களின் புறக்கணிப்புக்கு என்ன காரணம் என்பது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.


தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட் உரையை ஆரம்பித்தபோது அதிமுக உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்து உரத்த குரலில் ஏதோ கூறினர். ஆனால் அதை சபாநாயகர் அப்பாவு அனுமதிக்கவில்லை. பட்ஜெட் தாக்கல் நடைபெறவுள்ளது. வேறு பேச முடியாது என்று அவர் கூறினார்.




சபாநாயகரின் இந்த பேச்சைத் தொடர்ந்து பட்ஜெட் உரையைப் புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ.,க்கள், திமுக அரசு மீதான மதுபான ஊழலை கண்டித்து தாங்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தனர்.


இத குறித்து பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, டாஸ்மாக் துறையில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஆனால் டாஸ்மாக் துறையில் ரூ.40,00 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருக்கலாம். அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்காக திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தியே நாங்கள் பட்ஜெட் உரையை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்.


வரும் நாட்களில் இந்த டாஸ்மாக் விவகாரத்தை வைத்து அதிமுக புயலைக் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

லட்சியக் கனவை முன்னின்று நிறைவேற்றப் போவது நீங்கதான்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து

news

அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.. நீங்க யாரும் ஹர்ட் ஆகாதீங்க.. தவெக தலைவர் விஜய்

news

கோவையை அதிர வைத்த.. மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. 3 பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை!

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 விஐபி தொகுதிகள்...எந்த தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு?

news

இந்தியா உதவியது ஏன்?... வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

news

கேஸ் சிலிண்டர் விலை உயர்விற்கு திமுக தான் காரணம்...அண்ணாமலை சொன்ன காரணம்

news

ஈரான் போர் எப்பதான் முடியும்.. ஏன் இந்த சண்டை.. அடுத்து என்னதான் நடக்கும்?

news

வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு

news

ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்: மார்ச் 9 அன்று லோக்சபாவில் முக்கிய நகர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்