சுற்றுச்சூழலை பாதுகாக்க என்ன தினம் கொண்டாடலாம்?

Feb 02, 2026,04:13 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி, M.Sc,B.Ed


இந்தியாவில் பிப்ரவரி 2-ம் தேதி உலக ஈரநிலங்கள் தினம் (World Wetlands Day) கொண்டாடப்படுகிறது. 


ஈர நில தினத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.


ஈரநிலம் :




ஈரநிலங்கள் என்பது நிலமும் நீரும் சந்திக்கும் இடங்கள் ஆகும், அவை வருடத்தில் சில வாரங்களுக்கு நீரில் மூழ்கி அல்லது ஆண்டு முழுவதும் ஆழமற்ற நீரால் நிறைவுற்றதாக இருக்கலாம்.


சதுப்புநிலத் தாவரங்கள், மக்கு நிலப்பரப்புகள், ஈரமான புல்வெளிகள், சதுப்பு நிலங்கள், ஆறுகள் மற்றும் அவற்றின் வெள்ளச் சமவெளிகள், ஏரிகள், டெல்டாக்கள், அடர்வற்ற வனப்பகுதிகள் மற்றும் பவளப்பாறைகள் மற்றும் நெல்-வயல்கள், மீன் குளம் மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை ஈரநிலங்களில் அடங்கும்.


ராம்சார் ஒப்பந்தம் :


ராம்சார் ஒப்பந்தம் என்பது சர்வதேச ஈரநிலப்பகுதிகளை (Wetlands) பாதுகாக்கும் ஒரு சர்வதேச உடன்படிக்கை. இது 1971 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று ஈரானின் ராம்சார் நகரத்தில் கையெழுத்தானதால் “ராம்சார் ஒப்பந்தம்” எனப்படுகிறது.  உலகளவில் உள்ள ஈரநிலங்களை (Marshes, Lakes, Mangroves, Estuaries போன்றவை) பாதுகாப்பது.


1971-ல் ஈரானின் ராம்சாரில் கையெழுத்தான சர்வதேச ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில், இந்த நாள் மக்களுக்கும் ,கிரகத்திற்கும் சதுப்பு நிலங்கள் வகிக்கும் முக்கிய பங்கைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. 


ஈரநில தினத்தின் நோக்கம்: 


பூமியின் சுற்றுச்சூழலில் நீர் நிறைந்த பகுதிகள் (சதுப்பு நிலங்கள், ஏரிகள், ஆற்றங்கரைகள்) முக்கிய பங்கை வலியுறுத்துதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகும்.


ராம்சார் தளங்கள்:


2014 முதல் 2022 வரை, நாடு 49 புதிய ஈரநிலங்களை ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 2022 -ம் ஆண்டிலேயே மொத்தம் 28 இடங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ராம்சார் தளங்களுடன் மொத்தம் 14 -ல் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.


ஈர நிலத்தின் முக்கியத்துவம்:


ஈரநிலங்கள் இயற்கை வடிகட்டிகளாகச் செயல்படுகின்றன. வெள்ளத்தைக் கட்டுப்படுத்துகின்றன மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவுகின்றன. பூமியின் நிலப்பரப்பில் சுமார் 6% மட்டுமே ஈரநிலங்கள் இருந்தாலும், அவை உயிரினங்களின் பன்முகத்தன்மைக்கு இன்றியமையாதவை ஆகும்.


ஈர நிலங்களில் வாழும் பறவைகள், மீன்கள் மற்றும் தாவரங்கள் போன்றவற்றை பாதுகாக்க பொதுமக்கள் தன்னார்வலர்கள் மற்றும் தமிழ்நாடு வனத்துறையினருக்கு உதவி செய்வோம்.


சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!

news

FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்

news

பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!

news

கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!

news

Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!

news

Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)

news

Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!

news

தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!

news

இன்னிக்கி ஒரு பிடி.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்