சென்னை: அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன் கடைக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். வீலிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டுவது, சாகசம் செய்வது என்று தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமலேயே செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்று தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. காவல் துறையினர் வாசனை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபக்கம், வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து (06.10.2023 முதல் 05.10.2033 வரை) காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். பைக் ஓட்ட முடியாத காரணத்தால், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடையில், அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.எஃப், வாசனின் வாகன உதிரிபாகங்கள் கடைக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
TVK Cabinet: தவெக அமைச்சரவையில்.. எத்தனை அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்தத் துறை?
CM Vijay Swearing in: முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்.. அமைச்சர்களும் பதவியேற்பார்கள்
கிடைத்தது பெரும்பான்மை.. விஜய் ஆட்சி அமைக்க சிக்கல் நீங்கியது.. அடுத்து என்ன நடக்கும்?
தவெகவிடம் நாங்கள் பதவிகளைக் கோரவில்லை.. விடுதலைச் சிறுத்தைகள் விளக்கம்
DMK: தோல்வி கண்டு தொய்வடைய மாட்டோம்.... அன்று கருணாநிதி சொன்னது!
மக்கள் தீர்ப்பு மிகத் தெளிவாக உள்ளது.. ஆளுநர் ஜனநாயகத்தைப் புறக்கணிக்கிறார்.. சிபிஎம்
சிந்தனைச் சிதறல்.. நாளைய நிலையை உணராமல் கொடுக்கும் அனைத்தும் நம்மையே கெடுக்கும்!
தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!
தாலியை கையில் வைத்துக் கொண்டு.. இது வேண்டாம் விஜய்.. கஸ்தூரி அட்வைஸ்
{{comments.comment}}