சென்னை: அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறி யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன் கடைக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
யூடியூபரான டிடிஎப் வாசன் அதிவேகமாக பைக் சாகசம் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர். வீலிங் செய்வது, வேகமாக பைக் ஓட்டுவது, சாகசம் செய்வது என்று தொடர்ந்து சாலை விதிகளை மதிக்காமலேயே செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பெங்களூரு சாலையில் பைக்கில் செல்லும் போது வீலிங் செய்ய முயன்று தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி காயம் அடைந்தார். காயம் அடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்தில் டிடிஎஃப் வாசனின் கை எலும்பு முறிந்து, பலத்த காயம் ஏற்பட்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி, பரபரப்பானது. காவல் துறையினர் வாசனை கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட டிடிஎப் வாசன் 3 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். வாசனின் மனு மூன்று முறையும் தள்ளுபடி செய்யப்பட்டது. மறுபக்கம், வாசனின் ஓட்டுனர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து (06.10.2023 முதல் 05.10.2033 வரை) காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டிடிஎப் வாசனுக்கு ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தார். பைக் ஓட்ட முடியாத காரணத்தால், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், அவரது கடையில், அதிக ஒலி எழுப்பும், தடை செய்யப்பட்ட சைலன்சர்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகாரை தொடர்ந்து, சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் டி.டி.எஃப், வாசனின் வாகன உதிரிபாகங்கள் கடைக்கு போலீசார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}