பிளஸ்டூவைத் தொடர்ந்து.. 11ம் வகுப்பு பொது தேர்வும் இன்று தொடங்கியது... ஆல் தி பெஸ்ட் மாணவர்களே!

Mar 04, 2024,11:18 AM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.


கடந்த மார்ச் 1ம் தேதி  பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302  தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், 11ம் வருப்பு மாணவர்ளுக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.




இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,89,736 மாணவர்களும்  4,30, 471 பேர் மாணவியர்களும், இவர்களைத் தவிர தனித்தேர்வர்கள் 5000 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வுகளுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்கவும் சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை கண்காணிக்க 46 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

news

"நாங்கள் அஞ்சி விடமாட்டோம்" – ரெய்டு பற்றி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி!

news

அடிச்சது யாரைத் தெரியுமா.. ஜெர்மனியை வீழ்த்திய ஈக்வடார்... நாட்டுக்கே லீவு விட்டு கொண்டாடிய அதிபர்!

news

மத்திய அமைச்சரவை 2 நாட்களில் மாற்றம்? நிர்மலா சீதாராமனின் இலாகா மாறுகிறதா?

news

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை...சென்னையில் நாளை கனமழை வாய்ப்பு

news

15 ஆண்டுகளுக்குப் பிறகு 'செவ்வந்தி' அரசு பங்களாவை காலி செய்தார் இபிஎஸ்

news

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்