சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு இன்று தொடங்கியது. இத்தேர்வுகள் வருகிற 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி மார்ச் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 7.25 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதவுள்ளனர். இவர்களின் வசதிக்காக 3302 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், 11ம் வருப்பு மாணவர்ளுக்கான பொது தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளது.

இந்த தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 மாணவர்கள் எழுதுகின்றனர். இவர்களில் 3,89,736 மாணவர்களும் 4,30, 471 பேர் மாணவியர்களும், இவர்களைத் தவிர தனித்தேர்வர்கள் 5000 பேரும் இத்தேர்வினை எழுதுகின்றனர். தேர்வுகளுக்காக தமிழ்நாட்டில் மட்டும் 3302 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை கண்காணிக்கவும் சோதனையில் ஈடுபடவும் 3200 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை கண்காணிக்க 46 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தடுக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் பணிக்கு அமர்த்த கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உரிய அடையாள அட்டை, ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றுடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களிலும் போதிய காற்றோட்ட வசதி, வெளிச்சம், மின்விசிறி வசதி உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!
பாஜக.,வில் அண்ணாமலைக்கு புதிய பொறுப்பு? - பின்னணியில் நடந்தது என்ன?
திமுக பணத்தை நம்பி உள்ளது, அங்கு உழைக்க ஆளில்லை; இளைஞர்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றலாம்: அன்புமணி
பறவைக் காய்ச்சல் பரவல்... ஹாஃப்பாயில் சாப்பிடாதீங்க: எச்சரிகை விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழகத்தில் பிப்., 13ம் தேதி லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என்றும் என் மனைவி சீதா தான்....நான் பிரிந்ததை நினைத்து என்னைக்கும் வருத்தப்பட்டதே இல்லை: பார்த்திபன்
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்
பாகிஸ்தானின் பல்டி அரசியல்.. ஐசிசி-யின் அதிரடி கடிதத்தால் அடிபணிந்த பிசிபி!
தேர்வுகளை நடத்த தெரியாதவர் தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு: எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}