சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு எதிராக 100 எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ்

Feb 10, 2026,06:19 PM IST

புதுடெல்லி : இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவியில் இருந்து நீக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி இன்று அதிரடியாக 100 க்கும் அதிகமான எம்.பி.,க்களிடம் கையெழுத்து பெற்று நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


118 எம்.பி.க்கள் ஆதரவு :




காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை செயலகத்தில் அளிக்கப்பட்ட இந்த நோட்டீஸில், அக்கட்சியைச் சேர்ந்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) கையெழுத்திட்டுள்ளனர். சபாநாயகர் ஒருவருக்கு எதிராக இத்தனை பெரிய எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நோட்டீஸ் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்தில் மக்களவையில் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, "பிரதமரைத் தாக்க காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி செய்ததாக" ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து பெண் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சபாநாயகரின் இந்த விமர்சனம் ஒருதலைப்பட்சமானது என்றும், அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் விளைவாகவே, அவரை மாற்றக் கோரி இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.


சபாநாயகர் பதவி என்பது நடுநிலையானது. ஆனால், அவர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டரீதியான அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, இந்த நோட்டீஸ் பரிசீலிக்கப்பட்டு, அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் போது பெரும் விவாதம் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.


மக்களவையில் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதும், அதற்கு மற்ற எதிர்க்கட்சிகள் எந்தளவிற்கு ஆதரவு அளிக்கும் என்பதும் இனி வரும் நாட்களில் தெரிய வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!

news

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்

news

தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து

news

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!

news

மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!

news

லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!

news

அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!

news

Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!

news

"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்