- சசிகலா விஸ்வநாதன்
(இரட்டைக் கிளவி துளிப்பாக்கள்)
பளபளவெனும் மின்னல்
மடமடவென சரிகிறது
படபடவென மழை
மினு மினுங்கும் நட்சத்திரம்
கரு கருவெனும் வானம்
பள பளக்கிறது இரவு
வரிவரியாய் மேகங்கள்
விதவிதமாய் வானத்தில்
அழகழகாய் கோலங்கள்

செவேல் செவேலெனும் சூரியன்
பசேல் பசேலெனும் நிலமகள்
உளேன் உளேனெனும் நான்
குளுகுளு குற்றாலம்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)
காதல் .. ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்!
வீணையடி நீ எனக்கு
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
முல்லை மலரும் உனைச் சூடத் தேடுமோ!
இனியத் தமிழ் இனியவையே தமிழ்
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
Bharathirajan Short Story: நம்பிக்கை பொய்க்கவில்லை!
{{comments.comment}}