- கவி கலை
சுடராக மனதில் விளைந்த
சுவடு நீ!
சாரலாக மனதில் விழுந்த
துளி நீ!
கவியாக மனதில் கரைந்த
காவியம் நீ!
தூரம் பிரிவுக்கு மட்டுமல்ல,
புரிதலுக்கும் தான் ,
வாழ்க்கை வாழ மட்டுமல்ல
வழங்குவதற்கும் தான்.
காதல் தொடுதல் மட்டுமல்ல
தொடர்வதற்கும் தான்.

காதல்,
போதும் என்றாலும் பொங்கிடும்,
வேண்டாம் என்றாலும் வென்றிடும்
விலகிச்சென்றாலும் விரைந்திடும்
மறைந்திடு என்றாலும் மலர்ந்திடும்,
ஏதுமின்றி சென்றாலும் யாதுமாகி நின்றிடும்,
முரணாக இருந்தாலும்,
முளைத்திடும் .
(சொ.கலையரசி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர். தாய் CBSE பள்ளி வேதியியல் ஆசிரியையாக 3 ஆண்டுகள் பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக "எழுதுக" என்னும் புத்தகம் எழுதும் இயக்கத்தோடு இணைந்து எழுத்துப்பணியாற்றி வருகிறார். 1. புழுதிமண் கவிதைத்தொகுப்பு, 2. உடைந்தும் உருவெடு குறுநாவல் என இரு நூல்களைப் படைத்துள்ளார். இறையன்பு IAS முன்னிலையில் அவை வெளியிடப்பட்டன.)
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: நீலகிரி, தேனி மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு!
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல்
தமிழக முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.67,452 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது மண் திருட்டுப் புகார்: லஞ்ச ஒழிப்புத் துறையில் மனு!
மினு மினுங்கும் நட்சத்திரம் கரு கருவெனும் வானம் பள பளக்கிறது இரவு!
லார் கிப்பான் குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்!
அருகன்குளம் ஜடாயு தீர்த்தம் போயிருக்கீங்களா.. மறக்காம போய்ட்டு வாங்க ஒரு வாட்டி!
Short Story by Sudha Thirunarayanan: காதல் 50!
"ஏம்மா.. சரி சரி".. கவிதை நடையில் கதை படிக்க வாங்க!
{{comments.comment}}