இன்னும் 4 எம்.பிக்களை சஸ்பெண்ட் பண்ணிடுங்க.. அரை சதம் அடிக்கலாம்.. சு. வெங்கடேசன் கிண்டல்!

Dec 18, 2023,05:11 PM IST

புதுடில்லி: நாடாளுமன்ற மக்களவையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சித் தலைவர்கள் உள்பட இதுவரை 47 எம்.பிக்கள் பேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.


நாடாளுமன்ற மக்களவையில் இரு இளைஞர்கள் வண்ணப் புகை குண்டுகளை வீசி பெரும் பரபரப்பு ஏற்படுத்தினர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லோக்சபாவில், பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பார்வையாளர் பாஸ் வழங்குவது தொடர்பாக அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 


இதை ஏற்காத எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.




இதுகுறித்து பதில் அளித்த சபாநாயகர் ஓம் பிர்லா,  நாடாளுமன்ற செயலாளர் தான் பொறுப்பு என விளக்கம் அளித்தார். எனினும், தொடர்ந்து எதிர்க் கட்சியினர் அமலில் ஈடுபட்டதால் மக்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மக்களவை மீண்டும் கூடிய போது பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் துரதிஷ்டவசமான சம்பவம் என்றும், இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கூறினார். என்னும் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எம்பிக்கள் தொடர்ந்து அமலில் ஈடுபட்டனர். 


அதனால் கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் 13 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், திமுக எம்பிக்கள் டி. ஆர். பாலு , ஆர் ராஜா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட 33 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


கனிமொழி கா. வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்பிக்கள் கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.


சு. வெங்கடேசன் கிண்டல் டிவீட்


இதுகுறித்து  சு. வெங்கடேசன் ஒரு டிவீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:


நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறல் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வலியுறுத்தியதற்காக இன்று மீண்டும் 33 எம் பி கள் இடைநீக்கம். மக்களவை வரலாற்றில் 46  எம் பி களை இடைநீக்கம் செய்து புதிய சாதனை படைத்துள்ளது மோடி அரசு.


நாளை இன்னொரு நான்கு  எம் பி களை இடைநீக்கம் செய்து அரைசதத்தை எதிர்பார்க்கலாம் என்று சு. வெங்டேசன் கூறியுள்ளார். இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பிக்கள் அவைக்குள்ளேயே போராட்டம் நடத்தி முழக்கமிட்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

Case against Vijay: தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்தது ஏன்?.. தலைமை தேர்தல் அதிகாரி கேள்வி

news

ADR Report: புதுச்சேரியில் 23% வேட்பாளர்கள் மீது கிரிமினல் கேஸ்... 41% பேர் கோடீஸ்வரர்கள்!

news

சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - பொதுமக்கள் மீது சுமத்தப்படும் நியாயமற்ற சுமை: செல்வப்பெருந்தகை

news

மொத்த குடும்பமும் விஜய்க்கு கடனாளிகளா?.. புஸ்ஸி ஆனந்த் பெயரும் இருக்கு.. இதைக் கவனிச்சீங்களா?

news

Gold Rate: தொடர் உயர்வில் இருந்த தங்கம் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!

news

CM MK Stalin campaign: திருவாரூரில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

TVK Campaign: முதலில் நாளிலேயே 3 இடங்களில் பிரச்சாரம் ரத்து... என்ன செய்ய போகிறார் விஜய்?

news

Tamil Nadu Elections: பாஜக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

news

IPL 2026.. ஐபிஎல் கிரிக்கெட் 2026 : பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்

அதிகம் பார்க்கும் செய்திகள்