- கலைவாணி கோபால்
63 நாயன்மார்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.. ஒரு வேளை தெரியாவிட்டாலும் கவலை இல்லை.. அவர்களைப் பற்றித்தான் தொடர்ந்து நாம் பார்க்கப் போகிறோம். அதில் இன்று நாம் முதலில் பார்க்கப் போவது திருநீலகண்ட நாயனார்.
"திருநீலகண்டத்து குயவனார் அடியேன்" என்னும் சிறப்புக்கு உரியவர் நமது திருநீலகண்ட நாயனார். தென்னக சிவ தலங்களில் ஒன்றாக கருதப்படும் தில்லை சிதம்பரத்தில் சிவப்பணியில் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் திரு நீலகண்ட நாயனார்.
இவரின் இயற்பெயர் தெரியவில்லை, இவர் சிவபெருமானின் திரு நீலகண்டர் என்ற நாமத்தை சொல்லியே தன் வாழ்நாள் முழுவதும் அனைத்து வேலைகளையும் செய்ததால் இவர் திருநீல கண்டர் என்று அழைக்கப்பட்டார். இவர், அடியார்களுக்கு ஓடு எனப்படும் மண் ஆளான உணவு தட்டுகளை அடியார்களுக்கு கொடுத்து தொண்டு செய்து வாழ்ந்து வந்தவர் .

இவர் 25 வயதை கடக்கும்போது ரத்தின சாலை என்னும் பெண்ணை இவருக்கு மணமுடித்து வைத்தனர். மணமான பின்பு கணவன் மனைவி இரண்டு பேருமே குயவர் பணியில் ஓடு செய்யும் பணியை மேற்கொண்டு அடியார்களுக்கு கொடுத்து சிவதொண்டு செய்து வாழ்ந்து வந்தனர்.
இவர்கள், வாழ்விலும் ஒரு திருப்பம்ஏற்பட்டது. திருநீலகண்டர் காமத்தின் விளைவால் மனைவியை தாண்டிய பெண்களை தொடர்ந்து இருந்து வந்ததால், மனைவி ரத்தின சாலை எவ்வாறு இதை தடுப்பது என்று தெரியவில்லை.
கணவரின் சிவத்தொண்டை அருகில் இருந்து பார்ப்பவள் ரத்தினசாலை, அதனால் கணவரை காட்டிக் கொடுக்கவும் அல்லது நாலு பேரிடம் சொல்லி அவமானப்படுத்தவும் அவர் விரும்பவில்லை. கணவனுக்கு அவமானம் என்றால் அது தனக்கும் என்று நினைத்து வாழ்ந்து வந்தவர். அதனால் அவரை விட்டு விலகி வாழ முடிவு செய்து, ஒரு நாள் திருநீலகண்டர் மனைவியை நெருங்கும் போது"என்னை தீண்டு வீராயின் திருநீலகண்டம்" என்று சொல்லிவிட்டார்.
அதாவது,.… சிவன் மேல் ஆணையாக நீர் என்னைத் தொடக் கூடாது என்று தனது மொத்த மனக் கொதிப்பையும் கொட்டி விட்டார். அதிர்ந்து போன திருநீலகண்டர், தான் வணங்கும் ஈசன் பெயரால் ரத்தினசாலை ஆணையிட்டதால், இனி, உன்னை மட்டுமல்ல எந்த பெண்ணையும் சிந்தையால் கூட நினைய மாட்டேன் என்று வாக்களித்தார்.
அவர்கள் உறவில் விரிசல் வந்த போதும், அவர்கள் ஒரே வீட்டில் மட்டுமே ஒருவருக்கொருவர் அனைத்து பணிகளையும் செய்து வாழ்ந்து வந்தனர். கணவனுக்கு பிடித்ததை மனைவி செய்து தருவதும் மனைவிக்கு பிடித்ததை கணவன் செய்து தருவதும் என்று அவர்கள் காலங்கள் கடந்தன. கிட்டத்தட்ட நீலகண்டருக்கு என்பது வயது ஆன நிலையில் கையில் கொம்பு ஊன்றி, கூன் முதுகு அடைந்த நிலையிலும் அவரும் அவரது மனைவியும் சிவத்தொண்டினை புரிந்து வந்தனர்.
இவர்களின் இந்த 60 ஆண்டு கால தவத்தை அருமையை வெளிக்கொண்டுவர சிவபெருமான் முடிவு செய்தார். அதன் காரணமாக அவர் ஒரு சிவனடியார் கோலத்தில் அரை ஆடை அணிந்து திருநீல கண்டர் முன் வந்து திருநீறு அளித்தார்.
அடியார் என்றாலே சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட இருவரும் அவருக்கு வேறு ஏதும் வேண்டுமா என்று திரும்பத் திரும்ப அவரிடம் கேட்டனர், அதற்கோ அந்த அடியவர் சிரித்துக்கொண்டே எனக்கு எதுவும் வேண்டாம் என்னிடம் ஒரு பழைய ஓடு உள்ளது, அது மிகவும் புனிதமானது உன் பொருள் அதற்கு ஈடாகாது இதை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் கோயில் யாத்திரை செல்கிறேன். அதுவரை இந்த ஓட்டை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று திரும்புகிறேனோ அன்று இதை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அதை கொடுத்து சென்றார்.
அவர்களும் அதை ஒரு அழகிய பெட்டியில் வைத்து தீப தூபம் போட்டு அந்த ஓடை வைத்து பாதுகாத்து வந்தனர். அந்த திருவோடை அவர் திரும்பி வந்து கேட்டபோது அந்தப் பெட்டியை திறந்த போது திருநீலகண்டர் அதிர்ந்து போனார் அந்தபெட்டியில் அந்த திருவோடு ஆனது இல்லாமல் போனது. இதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார் திருநீலகண்டரும் அவரது மனைவியும் என்ன செய்வது என்று தெரியாமல் இருவரும் திகத்தின் என்று உண்மையை அந்த சிவன் அடியாரிடம் சென்று உரைத்தனர்
ஆனால் அவரோ அதை ஏற்காமல் எனது ஓட்டை நீங்கள் திருடி கொண்டீர்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டி அந்த ஊர் மக்களிடம் நீதி வழங்குமாறு முறையிட்டார். ஆனால், அவ்வூர் மக்களுக்கு ஏற்கனவே திருநீலகண்டரும் அவரது மனைவிய…
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு எப்போதுமே ஒத்துவராது - முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் வராது : செல்வப்பெருந்தகை உறுதி
என்னடா இது விசிலுக்கு வந்த சோதனை.. அடுத்தடுத்து தடை செய்யப்படுவதால் சலசலப்பு!
தேமுதிகவுடன் இதுவரை பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவிப்பு!
2 சூப்பர் ஓவர்.. ஒரு சூப்பர் மேட்ச்.. போராடிய ஆப்கானிஸ்தான்.. 4 ரன்களில் வென்ற தெ. ஆப்பிரிக்கா
"இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைத்துவிட்டீர்கள்": மக்களவையில் ராகுல் காந்தியின் ஆவேச உரை
மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்கிறது: அண்ணாமலை
நாடாளுமன்ற மரபுகளை மீறுகிறார் ராகுல் காந்தி...கிரண் ரிஜிஜு கடும் விமர்சனம்
{{comments.comment}}