பெற்றோர்களே உஷார்.. செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. கேரளாவில் பயங்கரம்!

Apr 25, 2023,01:16 PM IST
திருச்சூர் : கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த திருவில்வமலா பகுதியை சேர்ந்தவர் ஆதித்யஸ்ரீ. இவர் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்து சிதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



ஆதித்யஸ்ரீ, திருவில்வமலா பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ,நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போ���ு இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 

முகத்துக்கு அருகில் வைத்துக் கொண்டு விளையாடியுள்ளார் இந்த சிறுமி. அவரது முகம், கைகள் கடும் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விசாரைணக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உயிரை மொபைல் போன் குடித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்