பெற்றோர்களே உஷார்.. செல்போன் வெடித்து 8 வயது சிறுமி பலி.. கேரளாவில் பயங்கரம்!

Apr 25, 2023,01:16 PM IST
திருச்சூர் : கேரளாவில் மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த திருவில்வமலா பகுதியை சேர்ந்தவர் ஆதித்யஸ்ரீ. இவர் மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மொபைல் போன் வெடித்து சிதறி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 



ஆதித்யஸ்ரீ, திருவில்வமலா பகுதியில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த ஆதித்யஸ்ரீ,நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் மொபைல் போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போ���ு இந்த சம்பவம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. 

முகத்துக்கு அருகில் வைத்துக் கொண்டு விளையாடியுள்ளார் இந்த சிறுமி. அவரது முகம், கைகள் கடும் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தடயவியல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. விசாரைணக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் உயிரை மொபைல் போன் குடித்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு... தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியிடம் வழங்கப் போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

அதிகம் பார்க்கும் செய்திகள்