கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!

Mar 22, 2023,01:59 PM IST

சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.



இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இரண்டு நாட்களில் குணமடைந்து, வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா பாதிப்பு அகன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவரது முகநூல் பக்கத்திலும் இளங்கோவன் மருத்துவமனையில் நலமுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.


சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்