சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இரண்டு நாட்களில் குணமடைந்து, வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா பாதிப்பு அகன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவரது முகநூல் பக்கத்திலும் இளங்கோவன் மருத்துவமனையில் நலமுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}