சென்னை : மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இரண்டு நாட்களில் குணமடைந்து, வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது அவருக்கு லேசான மூச்சு திணறல் ஏற்பட்டது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவருக்கு ஏற்பட்டிருந்த கொரோனா பாதிப்பு அகன்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன. அவரது முகநூல் பக்கத்திலும் இளங்கோவன் மருத்துவமனையில் நலமுடன் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகியுள்ளது.
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}