மணிப்பூரில் ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

Jun 29, 2023,04:37 PM IST
இம்பால் : மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காரை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். 

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றார். மணிப்பூரின் சுரசாந்பூர் செல்வதற்காக ராகுல் திட்டமிட்டிருந்தார்.



ஆனால் சுரசாந்பூருக்க செல்லும் வழியில், பிஷ்னுபூர் செக் போஸ்ட் அருகிலேயே ராகுலின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ராகுலை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எதற்காக எங்களை தடுத்தார்கள் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும், இம்பால் மற்றும் சுரசந்பூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க ராகுல் திட்டமிட்டிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் ஒரு சுனாமி.. தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பு.. திமுக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

மணாளனின் மாண்புகள்!

news

Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

அதிகம் பார்க்கும் செய்திகள்