மணிப்பூரில் ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

Jun 29, 2023,04:37 PM IST
இம்பால் : மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காரை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். 

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றார். மணிப்பூரின் சுரசாந்பூர் செல்வதற்காக ராகுல் திட்டமிட்டிருந்தார்.



ஆனால் சுரசாந்பூருக்க செல்லும் வழியில், பிஷ்னுபூர் செக் போஸ்ட் அருகிலேயே ராகுலின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ராகுலை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எதற்காக எங்களை தடுத்தார்கள் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும், இம்பால் மற்றும் சுரசந்பூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க ராகுல் திட்டமிட்டிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்