மணிப்பூரில் ராகுல் காந்தியின் காரை தடுத்து நிறுத்திய போலீஸ்

Jun 29, 2023,04:37 PM IST
இம்பால் : மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் காரை போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி உள்ளனர். 

மணிப்பூரில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக இன்று காலை மணிப்பூர் புறப்பட்டுச் சென்றார். மணிப்பூரின் சுரசாந்பூர் செல்வதற்காக ராகுல் திட்டமிட்டிருந்தார்.



ஆனால் சுரசாந்பூருக்க செல்லும் வழியில், பிஷ்னுபூர் செக் போஸ்ட் அருகிலேயே ராகுலின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ராகுலை வரவேற்க சாலையின் இரு புறங்களிலும் மக்கள் காத்திருந்தனர். ஆனால் போலீசார் எங்களை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் எதற்காக எங்களை தடுத்தார்கள் என்றே தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.



வன்முறையில் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டு இடங்களுக்கும், இம்பால் மற்றும் சுரசந்பூர் பகுதியில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்திக்க ராகுல் திட்டமிட்டிருந்தார். அங்குள்ள உள்ளாட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேச அவர் திட்டமிட்டிருந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி

news

தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?

news

மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

news

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?

news

மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!

news

Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

news

பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?

news

நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!

news

ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது

அதிகம் பார்க்கும் செய்திகள்