ஸ்ரீரங்கம் : வைணவ திருத்தலங்களில் முதன்மையாகவும், பூலோக வைகுண்டம் என்றும் போற்றப்படும்.
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் சொர்க்கவாசல் இன்று( ஜனவரி 02) அதிகாலை திறக்கப்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22 ம் தேதி துவங்கியது. ஸ்ரீரங்கத்தில் 20 நாள் விழாவாக வைகுண்ட ஏகாதசி விழா நடைபெறும். டிசம்பர் 22 ம் தேதி துவங்கி பகல் உற்சவம் நடைபெற்று வந்தது.
பகல் பத்து உற்சவத்தில் நாள்தோறும் அரங்கர் சேவை நடைபெற்றது. இதில் நாள்தோறும் நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை உற்சவர் நம்மாழ்வார் விண்ணப்பம் (கேட்டல்) செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாளான நேற்று (ஜனவரி 01) நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. அதிகாலை 03.45 மணிக்கு நம்பெருமாள், ரத்ன அங்கி, பாண்டியன் கொண்டை உள்ளிட்ட ஆபரணங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டார். வேத விண்ணப்பம் முடிந்த பிறகு 04.45 மணிக்கு நம்பெருமாள் சொர்க்க வாசல் கடந்து வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
நம்பெருமாளை தொடர்ந்து பக்தர்களும் கோவிந்தா...ஸ்ரீரங்கா கோஷ முழக்கத்துடன் சொர்க்க வாசல் வழியாக சென்று, பெருமாளை தரிசனம் செய்தனர். இன்று முதல் இரா பத்து உற்சவம் துவங்க உள்ளது. ஜனவரி 11 ம் தேதி வரை இரா பத்து உற்சவம் நடைபெற உள்ளது. ஜனவரி 10 ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், ஜனவரி 11 ம் தேதி நம்மாழ்வார் மோட்ச நிகழ்வும் நடைபெற உள்ளது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறும்.
ஸ்ரீரங்கத்தை போன்று மற்ற வைணவ தலங்களிலும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
Image credit: Srirangam Ranganathaswamy Temple
SIR-க்கு எதிராக ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டியது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அடிப்படை ஜனநாயக உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கும் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியே SIR.. விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
SIR பணிகளை நிறுத்த வேண்டும்.. இல்லாவிட்டால் வழக்குத் தொடர்வோம்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தீர்மானம்
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
{{comments.comment}}