தமிழகத்தில் 50,000 தான்...உ.பி.,யில் 4 லட்சமாம்...பொது தேர்விற்கே 'ஜூட்' விட்ட மாணவர்கள்

Mar 14, 2023,04:16 PM IST

லக்னோ : தேர்வு துவங்கிய முதல் நாளே ப்ளஸ் 2 தேர்வினை தமிழகத்தில் 50,000 மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளதாக தகவல் வந்தது பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தையே மிஞ்சும் அளவிற்கு உ.பி.,யில் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை தவிர்த்துள்ளனர்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் துவங்கின. தேர்வு துவங்கிய முதல் நாளே 50,674 மாணவ, மாணவிகள் தேர்விற்கு வராமல் ஆப்சென்ட் ஆகி உள்ளதாக தமிழக பள்ளி, கல்வித்துறை தகவல் வெளியிட்டிருந்தது. பொதுத் தேர்வையே மாணவர்கள் தவிர்த்துள்ளனர்...அதுவும் 50,000 க்கும் அதிகமானவர்களா என பலரும் இங்கு ஆச்சரியப்பட்டு, அதிர்ச்சி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.




ஆனால் வட மாநிலத்தவர்கள், இதெல்லாம் ஒரு விஷயமா? எங்க ஊர்வல வந்து பாருங்க 4 லட்சம் பேர் தேர்வு எழுதாமல் ஜூட் விட்டுள்ளனர் என சொல்லி ஒட்டு மொத்த இந்தியாவிற்கே ஷாக் கொடுத்துள்ளனர். உத்திர பிரதோ மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், கடந்த வாரம் வியாழக்கிழமை துவங்கியது. இதில் முதல் நாள் தேர்வினை 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தவிர்த்துள்ளனர்.


தமிழக மாணவர்கள் முதல் தேர்வான தமிழ் தேர்வை தவிர்த்தது போல், உ.பி.,யில் உள்ள மாணவர்கள் முதல் தேர்வான இந்தி தேர்வை எழுதாமல் தவிர்த்துள்ளனர். 2020 ம் ஆண்டு கோவிட் காரணமாக 2021 ம் ஆண்டில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு முன் நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளின் போது முதல் நாள் தேர்வினை 2.4 லட்சம் பேர் எழுதாமல் தவிர்த்துள்ளனர். 2022 ம் ஆண்டில் 4.1 லட்சம் முதல் நாள் தேர்வை தவிர்த்துள்ளனர்.


பத்தாம் வகுப்பு தேர்வில் 9 பேர் ஆள்மாறாட்டம் செய்து எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீது உ.பி., தேர்வுத்துறை செயலாளர் திவ்யகாந்த் சுக்லா வழக்குப்பதிவு செய்துள்ளார். தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிக்க முடியாத வகையில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரப்படுத்தப்பட்டதே இவ்வளவு அதிகமான மாணவர்கள் தேர்வினை தவிர்த்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்